×

‘மரங்கள் பல நட்டு மனதில் அன்பை விதைத்தவர்’ – பாஜக சி.டி.ரவி

சின்ன கலைவாணர் என தமிழ் திரையுலகமே போற்றும் நகைச்சுவை நடிகர் விவேக் இன்று காலை 4 மணிக்கு மண்ணுலகை விட்டு விண்ணுலகை அடைந்தார். அவரது மறைவு தமிழ் திரையுலகினர் மத்தியிலும் அவரது ரசிகர்கள் மத்தியிலும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் அவர் உயிர் பிரிந்த நிலையில், அங்கிருந்து சென்னை சாலிகிராமத்தில் உள்ள இல்லத்திற்கு அவரது உடல் கொண்டு வரப்பட்டது. அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. விவேக்கின் உடலுக்கு நடிகர்களும் நடிகைகளும் அரசியல் பிரமுகர்களும் பொதுமக்களும்
 

சின்ன கலைவாணர் என தமிழ் திரையுலகமே போற்றும் நகைச்சுவை நடிகர் விவேக் இன்று காலை 4 மணிக்கு மண்ணுலகை விட்டு விண்ணுலகை அடைந்தார். அவரது மறைவு தமிழ் திரையுலகினர் மத்தியிலும் அவரது ரசிகர்கள் மத்தியிலும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் அவர் உயிர் பிரிந்த நிலையில், அங்கிருந்து சென்னை சாலிகிராமத்தில் உள்ள இல்லத்திற்கு அவரது உடல் கொண்டு வரப்பட்டது. அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

விவேக்கின் உடலுக்கு நடிகர்களும் நடிகைகளும் அரசியல் பிரமுகர்களும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். பிரதமர் மோடி, அமித்ஷா, துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு க ஸ்டாலின், திருமாவளவன், சீமான், தமிழக பாஜக தலைவர் முருகன், துணைத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலர் தங்களது ட்விட்டர் பதிவில் வாயிலாக விவேக் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.

இந்த நிலையில், தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி விவேக் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “மக்களை சிரிக்க வைத்து பல இதயங்களில் இடம் பிடித்தவர். சீரான கருத்துக்களை சொல்லி நல் எண்ணத்தை தூண்டியவர். மரங்கள் பல நட்டு மனதில் அன்பை விதைத்தவர் . தமிழர் நெஞ்சில் என்று இருப்பார் நடிகர் விவேக் அவர்கள். #ஓம்_சாந்தி” என்று குறிப்பிட்டுள்ளார்.