×

பாரத் நெட் விவகாரம்: அமைச்சர் ராஜினாமா செய்வாரா… டிஸ்மிஸ் செய்யப்படுவாரா? – மு.க.ஸ்டாலின் கேள்வி

பாரத் நெட் டெண்டர் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் இதுவரை ஊழலே நடைபெறவில்லை என்று கூறிவந்த தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் உதயகுமார் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்வாரா அல்லது அவரை முதல்வர் டிஸ்மிஸ் செய்வாரா என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாரபட்சமாகவும், வேண்டிய சிலர் மட்டுமே கலந்து கொள்ளும் வகையிலும் விடப்பட்டுள்ள 2000 கோடி ரூபாய் பாரத்நெட் டெண்டரை ரத்து செய்ய வேண்டும்” என்று இந்த டெண்டர் ஊழல்
 

பாரத் நெட் டெண்டர் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் இதுவரை ஊழலே நடைபெறவில்லை என்று கூறிவந்த தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் உதயகுமார் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்வாரா அல்லது அவரை முதல்வர் டிஸ்மிஸ் செய்வாரா என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாரபட்சமாகவும், வேண்டிய சிலர் மட்டுமே கலந்து கொள்ளும் வகையிலும் விடப்பட்டுள்ள 2000 கோடி ரூபாய் பாரத்நெட் டெண்டரை ரத்து செய்ய வேண்டும்” என்று இந்த டெண்டர் ஊழல் குறித்து, அறப்போர் இயக்கம் அளித்த புகாரினை காணொலிக் காட்சி வாயிலாக விசாரித்த மத்திய அரசு நேற்றைய தினம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டை ஊழல், டெல்லி செங்கோட்டைவரை சந்தி சிரிக்கிறது! பாரத்நெட் டெண்டர் ஊழல் குறித்து திராவிட முன்னேற்றக் கழகம் அளித்த புகாரில் “முகாந்திரம் இல்லை என்று முடித்து வைத்து விட்டதாக”, உயர்நீதிமன்றத்தில் கழக மாநிலங்களவை உறுப்பினர் திரு. ஆர்.எஸ்.பாரதி அவர்கள் தொடுத்த வழக்கில் பதிலளித்த லஞ்ச ஊழல் தடுப்புத்துறை; “ஊழலே நடக்கவில்லை” என்று, உண்மையை மறைக்க விதண்டாவாதம் செய்த தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் உதயகுமார் மற்றும் முதலமைச்சர் பழனிசாமி ஆகியோரோடு சேர்த்து இன்றைக்குக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டுள்ளது கண்டு நடுநிலையாளர்கள் நகைக்கிறார்கள். வெட்கித் தலை குனிய வேண்டியவர்கள், மீண்டும் மீண்டும் பொய்களைச் சொல்லி, பொதுமக்களை ஏமாற்றலாம் என வீண் முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள்!