×

என்.ஆர். தனபாலனை வெட்ட முயற்சி… ரத்தக்களரியாக மாறிய பெரம்பூர் தொகுதி!

அதிமுக கூட்டணியில் பெருந்தலைவர் மக்கள் கட்சிக்கு சென்னை பெரம்பூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் சார்பில் என்.ஆர்.தனபாலன் போட்டியிடுகிறார். இதனால் பெரம்பூர் தொகுதியில் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வரும் என்.ஆர்.தனபாலன் நேற்று அதிமுக கூட்டணி கட்சியினருடன் இணைந்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அந்த வகையில் வியாசர்பாடி உதய சூரியன் நகரில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த என்.ஆர்.தனபாலனை கூட்டத்தில் இருந்த ஒருவர் அரிவாளால் வெட்ட முயன்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அத்துடன் என்.ஆர்.தனபாலனை அதிமுக நிர்வாகி சிவக்குமார் காப்பாற்ற முயன்ற
 

அதிமுக கூட்டணியில் பெருந்தலைவர் மக்கள் கட்சிக்கு சென்னை பெரம்பூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் சார்பில் என்.ஆர்.தனபாலன் போட்டியிடுகிறார். இதனால் பெரம்பூர் தொகுதியில் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வரும் என்.ஆர்.தனபாலன் நேற்று அதிமுக கூட்டணி கட்சியினருடன் இணைந்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அந்த வகையில் வியாசர்பாடி உதய சூரியன் நகரில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த என்.ஆர்.தனபாலனை கூட்டத்தில் இருந்த ஒருவர் அரிவாளால் வெட்ட முயன்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அத்துடன் என்.ஆர்.தனபாலனை அதிமுக நிர்வாகி சிவக்குமார் காப்பாற்ற முயன்ற போது அவருக்கு வெட்டுக்காயம் உண்டானது. இதனால் அவர் உடனடியாக மீட்கப்பட்டு எருக்கஞ்சேரியில் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பெருந்தலைவர் மக்கள் கட்சி என்.ஆர்.தனபாலனை கொலைசெய்ய முயன்ற நபரை உடனடியாக கைது செய்யக்கோரி அவரது ஆதரவாளர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய நபரை தேடி வருகின்றனர். ‘ வெற்றி வாய்ப்பு சாதகமாக உள்ளதால் திமுகவினர் கொலை செய்யப்பார்ப்பதாக’ என்.ஆர்.தனபாலன் குற்றம் சாட்டியுள்ளார்.