×

“எதிர்க்கட்சிகள் அஞ்சுவதற்கு அமித்ஷா ஒன்றும் சர்வாதிகாரி அல்ல” : எம்.பி.கார்த்தி சிதம்பரம்

திமுக உள்ளிட்ட கட்சிகளிடம் குடும்ப அரசியல் குறித்து கேள்வி எழுப்பாதது ஏன்? என்று எம்.பி. கார்த்தி சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 21 ஆம் தேதி தமிழகத்திற்கு வருகை புரிகிறார். சட்டமன்ற தேர்தல் குறித்து வியூகம் வகுக்கும் வகையில் அமித்ஷாவின் வருகை இருக்கும் என சொல்லப்பட்டது. இதுகுறித்து பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் எல். முருகன், தமிழகத்திற்கு வரும் அமித்ஷாவுக்கு சிறப்பான வரவேற்பை அளிக்கவுள்ளோம். அமித்ஷா அரசு மற்றும் பாஜக
 

திமுக உள்ளிட்ட கட்சிகளிடம் குடும்ப அரசியல் குறித்து கேள்வி எழுப்பாதது ஏன்? என்று எம்.பி. கார்த்தி சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 21 ஆம் தேதி தமிழகத்திற்கு வருகை புரிகிறார். சட்டமன்ற தேர்தல் குறித்து வியூகம் வகுக்கும் வகையில் அமித்ஷாவின் வருகை இருக்கும் என சொல்லப்பட்டது. இதுகுறித்து பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் எல். முருகன், தமிழகத்திற்கு வரும் அமித்ஷாவுக்கு சிறப்பான வரவேற்பை அளிக்கவுள்ளோம். அமித்ஷா அரசு மற்றும் பாஜக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தமிழகம் வருகிறார். இதனால் அவர் முதல்வர் பழனிசாமியை சந்திக்க வாய்ப்புள்ளது. அமித்ஷாவின் தமிழக வருகை எதிர்க்கட்சிகளுக்கு பயத்தை ஏற்படுத்தும் என்றார். இதற்கு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்வினையாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த எம்.பி. கார்த்தி சிதம்பரம், “குடும்ப அரசியல் குறித்து காங்கிரசிடம் மட்டும் கேள்வி எழுப்புவது ஏன்? திமுக உள்ளிட்ட கட்சிகளிடம் குடும்ப அரசியல் குறித்து கேள்வி எழுப்பாதது ஏன்? பல மாநிலங்களில் முக்கிய தலைவர்களின் வாரிசுகளே அடுத்தடுத்து பதவிகளுக்கு வருகின்றனர். பீகார் தேர்தல் முடிவுகளை வைத்து தமிழகத்தில் தேர்தல் சூழலை கணிக்க முடியாது. பீகார் நிலவரம் வேறு, தமிழக நிலவரம் வேறு; திமுகவை தமிழகத்தில் ஆட்சியில் அமர்த்துவோம்” என்றார். தொடர்ந்து பேசிய அவரிடம் அமித்ஷாவின் தமிழக வருகை குறித்த எல். முருகன் கருத்து பற்றி கேள்வி வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், எதிர்க்கட்சிகள் அஞ்சுவதற்கு அமித்ஷா ஒன்றும் சர்வாதிகாரி அல்ல என்றார்.