×

பரபரப்பான சூழலில் கூடும் அதிமுக செயற்குழு ? – தலைமை கழகத்தில் தொண்டர்கள் உற்சாகம்!

பரபரப்பான சூழலில் அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக 300 க்கும் மேற்பட்டவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முக்கிய நிர்வாகிகள் அனைவரும் தலைமை கழகத்துக்கு வந்தவ்வண்ணம் உள்ளனர். தொண்டர்கள் வழக்கம்போல உற்சாக வரவேற்பை அளித்து வருகின்றனர். அழைப்பு விடுக்கப்பட்டவர்கள் மட்டுமே தலைமை கழகத்துக்கு அனுமதிக்கபட்டுள்ளனர். முன்னெச்சரிகை நடவடிக்கையாக அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இன்றைய கூட்டத்தில் என்ன என்ன தீர்மானங்கள் இடம் பெறும் என்பது மிக பரபரப்பாக எதிர்பார்க்கப்படுக்கிறது. தேர்தலை சந்திப்பதற்கு
 

பரபரப்பான சூழலில் அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக 300 க்கும் மேற்பட்டவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முக்கிய நிர்வாகிகள் அனைவரும் தலைமை கழகத்துக்கு வந்தவ்வண்ணம் உள்ளனர். தொண்டர்கள் வழக்கம்போல உற்சாக வரவேற்பை அளித்து வருகின்றனர்.

அழைப்பு விடுக்கப்பட்டவர்கள் மட்டுமே தலைமை கழகத்துக்கு அனுமதிக்கபட்டுள்ளனர். முன்னெச்சரிகை நடவடிக்கையாக அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

இன்றைய கூட்டத்தில் என்ன என்ன தீர்மானங்கள் இடம் பெறும் என்பது மிக பரபரப்பாக எதிர்பார்க்கப்படுக்கிறது. தேர்தலை சந்திப்பதற்கு முன், கட்சிக்குள் நிலவும் குழப்பங்களை தீர்ப்பதற்கான கூட்டமாகவும் இருக்கும் கூறப்படுகிறது.

கூட்டத்தில் அனைவருக்கும் பேச வாய்ப்பு வழங்கப்படுமா என்பது தெரியவில்லை. பேசுவதற்கு சிலருக்கு மட்டுமேஅனுமதிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.