×

அதிமுகவுக்கு தைரியம் இருந்தால் வழக்கு போடட்டும்- ஆ. ராசா

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக துணை பொதுச்செயலாளர் அ.ராசா, “முதல்வர் பழனிச்சாமி திமுக மீதும் தலைவர் மீதும் பல குற்றச்சாட்டு கூறுகிறார். விவாதத்துக்கும் அழைத்துள்ளார். நான் முதல்வருக்கு கடிதம் எழுதினேன். ஆனால் யாரும் இதுவரை அதற்கு பதில் அளிக்கவில்லை. சர்க்காரியா கமிஷன், 2 ஜி வழக்கு எல்லாம் நிரூபிக்கப்படவில்லை. உள் நோக்கத்துடன், ஆதாரமற்ற குற்றச்சாட்டு பேசுகிறார். ஊழல் செய்தவர் என்று ஜெயலலிதா தண்டிக்கப்பட்டவர். இது அனைவருக்கும் தெரியும். எங்கள் மீது ஆதாரம் இல்லாமல் எப்படி
 

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக துணை பொதுச்செயலாளர் அ.ராசா, “முதல்வர் பழனிச்சாமி திமுக மீதும் தலைவர் மீதும் பல குற்றச்சாட்டு கூறுகிறார். விவாதத்துக்கும் அழைத்துள்ளார். நான் முதல்வருக்கு கடிதம் எழுதினேன். ஆனால் யாரும் இதுவரை அதற்கு பதில் அளிக்கவில்லை. சர்க்காரியா கமிஷன், 2 ஜி வழக்கு எல்லாம் நிரூபிக்கப்படவில்லை. உள் நோக்கத்துடன், ஆதாரமற்ற குற்றச்சாட்டு பேசுகிறார். ஊழல் செய்தவர் என்று ஜெயலலிதா தண்டிக்கப்பட்டவர். இது அனைவருக்கும் தெரியும். எங்கள் மீது ஆதாரம் இல்லாமல் எப்படி பேச முடியும்?

அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, காமராஜ் என பலர் மீது லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் இருக்கிறது. விசாரணை செய்த விவரங்களை கொடுக்க மறுக்கின்றனர். அதிமுகவின் ஊழல் புகார் குறித்து ஆளுநரிடம் புகார் அளித்துள்ளோம். ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட ஜெயலலிதா படத்தை இன்னும் பயன்படுத்துகின்றனர். நான் யாருடன் விவாதிக்கவும் தயார். ஆனால் அதிமுகவில் யாரும் பதில் அளிப்பதில்லை.

உதயநிதி ஸ்டாலின் சசிகலா குறித்து பேசியதை சமூக வலையதளத்தில் திரித்து பேசுகின்றனர். அதிமுகவுக்கு தைரியம் இருந்தால் வழக்கு போடட்டும். நாங்கள் எதிர் கொள்ள தயாராக இருக்கிறோம். திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. பொள்ளாச்சி வழக்கில் பொள்ளாச்சி ஜெயராமன் மகன் மற்றும் அமைச்சர் வேலுமணிக்கு தொடர்பு இருக்கிறது. இதை முறையான விசாரணை, நீதிமன்றம் தலையீடு சரியாக இருக்கும். திமுக நடத்தும் கிராமசபை கூட்டத்தில் மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது. ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி” எனக் கூறினார்.