×

’’எதிர்ப்பவருக்கும் முதல்வர் அவர் தானே…பேரன்பாளன்’’’

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை செந்தமிழன்(84) நேற்று உடல்நலக் குறைவால் காலமானார். சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகிலிருக்கும் அரணையூரில் அவர் காலமானார். செந்தமிழன் மறைவுக்கு அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முதல்வர் மு.க. ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், ’’நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தையார் செந்தமிழன் செய்தி வேதனையளிக்கிறது. அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். தந்தையை இழந்த துயரத்தில் இருக்கும்
 

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை செந்தமிழன்(84) நேற்று உடல்நலக் குறைவால் காலமானார். சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகிலிருக்கும் அரணையூரில் அவர் காலமானார்.

செந்தமிழன் மறைவுக்கு அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முதல்வர் மு.க. ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், ’’நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தையார் செந்தமிழன் செய்தி வேதனையளிக்கிறது. அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். தந்தையை இழந்த துயரத்தில் இருக்கும் சீமானுக்கும், குடும்பத்தினருக்கும் எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.’’

இதுகுறித்து திராவிட இயக்க எழுத்தாளரும் பேச்சாளருமான வே.மதிமாறன், ‘’ஆட்சிக்கு வரவே கூடாது என காழ்ப்புணர்ச்சியும், வெறுப்பும் கலந்து கெட்ட வார்த்தைகளால் அவதூறு பரப்பிய நாம் தமிழருக்கு, தளபதி தந்த ஒரே பதில், அன்பும் ஆறுதலும். எதிர்ப்பவருக்கும் முதல்வர் அவர் தானே + பேரன்பாளன்’’என்று குறிப்பிட்டிருக்கிறார்.