×

ஸ்டாலின் எடுத்த அதிரடி: ராமதாஸ் மகிழ்ச்சி

கொரோனா போரில் ஈடுபட்டுள்ள மருத்துவர், செவிலியர்-பிற பணியாளர்களுக்கு ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கு ரூ.15,000 முதல் ரூ.30,000 வரை ஊக்கத்தொகை; உயிரிழந்த 43 மருத்துவப் பணியாளர் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என்கிறார் பாமக நிறுவனர் ராமதாஸ். அவர் மேலும், மருத்துவத்துறையினருக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும்; அவர்களின் மற்ற கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று நேற்று நான் அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், இன்று இந்த அறிவிப்புகள் வெளியாகி இருப்பது
 

கொரோனா போரில் ஈடுபட்டுள்ள மருத்துவர், செவிலியர்-பிற பணியாளர்களுக்கு ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கு ரூ.15,000 முதல் ரூ.30,000 வரை ஊக்கத்தொகை; உயிரிழந்த 43 மருத்துவப் பணியாளர் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என்கிறார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

அவர் மேலும், மருத்துவத்துறையினருக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும்; அவர்களின் மற்ற கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று நேற்று நான் அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், இன்று இந்த அறிவிப்புகள் வெளியாகி இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

கொரோனா போரில் உயிரிழக்கும் மருத்துவப் பணியாளர்களுக்கு முந்தைய அரசால் அறிவிக்கப்பட்ட ரூ.50 லட்சம் இழப்பீடு பின்னர் ரூ.25 லட்சமாக குறைக்கப்பட்டது தவறு. அதையே தற்போதைய அரசும் வழங்காமல் ரூ.50 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும்.

மருத்துவர்களின் ஊதிய முரண்பாட்டை களைந்து ஊதிய உயர்வும், காலம் சார்ந்த பதவி உயர்வும் வழங்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பிற கோரிக்கைகளையும் நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!’’என்று தெரிவித்துள்ளார்.