×

’’என்னதான் நடக்குது? மாம்பழம்தான் உதயசூரியனா?’’

கடந்த 6ம் தேதியன்று நடைபெற்ற தேர்தலின்போது அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி ஒன்றில் 65 வயதுடைய முதியவர் ஒருவர், ’’உதயசூரியன் சின்னம் எங்கே’’ என வாக்குசாவடி மையத்தில் இருந்த நபர் ஒருவரிடம் கேட்டுள்ளார். அப்போது அங்கிருந்த நபர், ‘’மாம்பழம் சின்னம் தான் உதயசூரியன்’’ என முதியவரிடம் வாக்கினை பதிவு செய்யும்படியும், அதனை வீடியோவும் எடுத்து சமூக வலைத்தளங்களில் அந்த நபர் பரவ விட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி
 

டந்த 6ம் தேதியன்று நடைபெற்ற தேர்தலின்போது அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி ஒன்றில் 65 வயதுடைய முதியவர் ஒருவர், ’’உதயசூரியன் சின்னம் எங்கே’’ என வாக்குசாவடி மையத்தில் இருந்த நபர் ஒருவரிடம் கேட்டுள்ளார்.

அப்போது அங்கிருந்த நபர், ‘’மாம்பழம் சின்னம் தான் உதயசூரியன்’’ என முதியவரிடம் வாக்கினை பதிவு செய்யும்படியும், அதனை வீடியோவும் எடுத்து சமூக வலைத்தளங்களில் அந்த நபர் பரவ விட்டுள்ளார்.

அந்த வீடியோ தற்போது வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி தேர்தல் நடத்தும் அலுவலரான மாவட்ட கலெக்டர் ரத்னா, ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் உடையார்பாளையம் ஆர்.டி.ஓ அமர்நாத் ஆகியோரிடம் புகார் மனு அளித்திருக்கிறர் திமுக வேட்பாளர் கண்ணன்.

’’தேர்தல் விதிமுறையின்படி வாக்களிக்கும் நபரை தவிர மூன்றாவது நபர் ஒருவர் உள்ளே செல்லுதல் தவறு. உள்ளே சென்று வாக்களிக்கும் இடத்தில் வீடியோ எடுத்து வெளியிட்டது தவறு. இதை அனுமதித்த தேர்தல் வாக்குச்சாவடி அலுவலர்கள் யார் என கண்டுபிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என்று கண்ணன் அந்த புகார் மனுவில் குறிப்பிட்டிருக்கிறார்.

இதுகுறுத்து கரூர் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, ’’என்னதான் நடக்குது? இதன் உண்மைத்தன்மையைக் கண்டறிந்து இந்த அதிகாரி மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். உடனடியாக இந்த வாக்கு சாவடியில் மறு வாக்குப் பதிவிற்கு உத்திரவிடவேண்டும்.’’என்று கொந்தளிக்கிறார்.