×

பேரனுடன் நடந்து சென்று வாக்களித்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

முதல்வர் பழனிச்சாமி இன்று காலை 10.30 மணிக்கு மேல் சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் உள்ள சிலுவம்பாளையம் அரசு பள்ளியில் வாக்களித்தார். வீட்டிலிருந்து குடும்பத்தினருடன் நடந்தே வாக்குச்சாவடிக்கு வந்தார் பழனிச்சாமி. வாக்களிக்கும் இடத்திற்கே தனது பேரனை அழைத்து சென்றார். வாக்களித்த பின்னர் தனது பேரனை தூக்கிக்கொண்டு வெளியே வந்தார். அப்போது செய்தியாளர்கள் அவரை சந்தித்தபோது, ‘’மக்கள் எல்லோரும் ஜனநாயக கடமையாற்ற வேண்டும். வாக்களிக்க வேண்டும்’’ என்று கூறிச்சென்றார். தாயின் புகைப்படத்தினை வணங்கிய பின்னரே முதல்வர் வாக்குச்சாவடிக்கு புறப்பட்டார்.
 

முதல்வர் பழனிச்சாமி இன்று காலை 10.30 மணிக்கு மேல் சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் உள்ள சிலுவம்பாளையம் அரசு பள்ளியில் வாக்களித்தார்.

வீட்டிலிருந்து குடும்பத்தினருடன் நடந்தே வாக்குச்சாவடிக்கு வந்தார் பழனிச்சாமி.

வாக்களிக்கும் இடத்திற்கே தனது பேரனை அழைத்து சென்றார். வாக்களித்த பின்னர் தனது பேரனை தூக்கிக்கொண்டு வெளியே வந்தார்.

அப்போது செய்தியாளர்கள் அவரை சந்தித்தபோது, ‘’மக்கள் எல்லோரும் ஜனநாயக கடமையாற்ற வேண்டும். வாக்களிக்க வேண்டும்’’ என்று கூறிச்சென்றார்.

தாயின் புகைப்படத்தினை வணங்கிய பின்னரே முதல்வர் வாக்குச்சாவடிக்கு புறப்பட்டார்.