×

சனாதனிகளின் ஒரே குறி விடுதலைச் சிறுத்தைகள் தான்…திருமாவளவன்

திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 6 தொகுதிகளில் போட்டியிடுகிறது. 6 தொகுதிகளிலும் பானை சின்னத்தில் போட்டியிடுகிறது. திருமாவளவன் பிரச்சாரத்தில் சொன்னதாக சமூக வலைத்தளங்களில் ஒரு போட்டோ கார்டு ஒன்று பரவி வருகிறது. அதில், 6 தொகுதியிலும் டெபாசிட் இழந்தாலும் எங்களுக்கு இந்து நாய்களின் ஓட்டு தேவையில்லை என்று திரிமாவளவன் பேசியதாக உள்ளது. அதற்கு விசிகவினர், ‘’தோல்வி பயத்தில் தொடை நடுங்கி சங்கிகள் தலைவர் எழுச்சித்தமிழர் மீதும் கட்சியின் மீதும் சமூக வலைத்தளங்களில் பொய் மற்றும் அவதூறு
 

திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 6 தொகுதிகளில் போட்டியிடுகிறது. 6 தொகுதிகளிலும் பானை சின்னத்தில் போட்டியிடுகிறது.

திருமாவளவன் பிரச்சாரத்தில் சொன்னதாக சமூக வலைத்தளங்களில் ஒரு போட்டோ கார்டு ஒன்று பரவி வருகிறது.

அதில், 6 தொகுதியிலும் டெபாசிட் இழந்தாலும் எங்களுக்கு இந்து நாய்களின் ஓட்டு தேவையில்லை என்று திரிமாவளவன் பேசியதாக உள்ளது.

அதற்கு விசிகவினர், ‘’தோல்வி பயத்தில் தொடை நடுங்கி சங்கிகள் தலைவர் எழுச்சித்தமிழர் மீதும் கட்சியின் மீதும் சமூக வலைத்தளங்களில் பொய் மற்றும் அவதூறு பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். இதுபோன்ற கேவலமான செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது வழக்கு தொடர்ந்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளனர்.

இதற்கு திருமாவளவன், ‘’அவதூறு: சனாதனிகளின் ஒரே குறி விடுதலைச் சிறுத்தைகள் தான். தமிழக அரசியல் களத்தை- குறிப்பாக, தேர்தல் களத்தை அவர்களுக்கு எதிராகத் திருப்பிவிட்டது விடுதலைச்சிறுத்தைகள் தான் என்பதை அறிந்து இவ்வாறான அவதூறுகளைப் பரப்புகின்றனர். சங்கிகளின் சதிகளை அறிந்த தமிழ்மக்கள் இதனை நம்பமாட்டார்கள்’’என்று தெரிவித்துள்ளார்.