×

சிவகங்கையில் இருந்து ஆட்களை இறக்கிய கோகுல இந்திரா

சென்னை அண்ணாநகர் தொகுதியில் திமுக சார்பில் மோகன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா போட்டியிடுகிறார். இவர் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதால், தேர்தல் பிரச்சார பணிகளுக்காக சிவகங்கை மாவட்டத்தில் இருந்து நிறைய பேரை அண்ணாநகர் தொகுதிக்கு அழைத்து வந்திருக்கிறார். இவர்களுக்கும் தொகுதிக்கு உட்பட்ட அதிமுகவினர்கும் ஒத்துப்போகவில்லையாம். கோகுல இந்திராவின் சொந்த ஊர்க்காரர்கள் என்பதால் அண்ணாநகர் அதிமுகவினருக்கு அவர்கள் முக்கியத்துவம் தரவில்லையாம். இதனால் அண்ணாநகர் அதிமுகவினரும் முறுக்கிக்கொண்டு நிற்கிறார்களாம். இதனால் தேர்தல் பணிகளில் தொய்வு
 

சென்னை அண்ணாநகர் தொகுதியில் திமுக சார்பில் மோகன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா போட்டியிடுகிறார். இவர் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதால், தேர்தல் பிரச்சார பணிகளுக்காக சிவகங்கை மாவட்டத்தில் இருந்து நிறைய பேரை அண்ணாநகர் தொகுதிக்கு அழைத்து வந்திருக்கிறார்.

இவர்களுக்கும் தொகுதிக்கு உட்பட்ட அதிமுகவினர்கும் ஒத்துப்போகவில்லையாம். கோகுல இந்திராவின் சொந்த ஊர்க்காரர்கள் என்பதால் அண்ணாநகர் அதிமுகவினருக்கு அவர்கள் முக்கியத்துவம் தரவில்லையாம். இதனால் அண்ணாநகர் அதிமுகவினரும் முறுக்கிக்கொண்டு நிற்கிறார்களாம்.

இதனால் தேர்தல் பணிகளில் தொய்வு ஏற்பட்டிருக்கிறது. இரு தரப்பினரையும் ஒருங்கிணைத்து விட்டால் அண்ணாநகரில் அதிமுகதான் வெற்றி பெறும். அவங்க வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என்று எதிர்கட்சியினரே முணுமுணுக்கின்றனர்.