×

சசிகலாவை சந்திக்க வாய்ப்பில்லை… அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்

சசிகலாவை நான் நிச்சயமாக சந்திக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்தார் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன். திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூகநலத்துறை சார்பாக தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. மேலும், வருவாய்துறை சார்பில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்று, 3100 பெண்களுக்கு 19 கோடியே 20 லட்சம் மதிப்பிலான தங்கமும், திருமணம் நிதி உதவியும் வழங்கினர் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜனும், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதியும். 1984
 

சசிகலாவை நான் நிச்சயமாக சந்திக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்தார் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூகநலத்துறை சார்பாக தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. மேலும், வருவாய்துறை சார்பில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்று, 3100 பெண்களுக்கு 19 கோடியே 20 லட்சம் மதிப்பிலான தங்கமும், திருமணம் நிதி உதவியும் வழங்கினர் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜனும், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதியும்.

1984 பயனாளிகளுக்கு 10,93,50,345 மதிப்பீட்டில் இலவச வீட்டு மனை பட்டாவையும் வழங்கினர்.

இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது, சசிகலாவை சந்திப்பீர்களா என்ற கேள்விக்கு, ‘’சசிகலாவை நான் நிச்சயமாக சந்திக்க வாய்ப்பில்லை’’என்றார் வெல்லமண்டி நடராஜன்.

அமமுகவுடன் அதிமுக இணையுமா? என்ற கேள்விக்கு, ‘’அமமுகவுடன் கூட்டணி அமைக்கும் நிலையில் அதிமுக தலைமை இல்லை’’என்றார்.