×

ஸ்டாலினை சிறையிலடைத்த சுவர் விளம்பரம்! திமுகவின் ‘தரமான சம்பவம்’

தேர்தல் காலம் வந்துவிட்டதால் எங்கெங்கும் ஒரே விளம்பர மயமாக இருக்கிறது. திரும்பிய பக்கமெல்லாம் கட்சியினரின் சுவர் விளம்பரங்கள்தான், போஸ்டர்கள்தான், பேனர்கள்தான். இந்த நேரத்தில் சுவர் விளம்பரத்தினால் சிறை சென்ற ஸ்டாலினின் வீர வரலாறு குறித்து மூத்த பத்திரிகையாளர் இதயக்கனி எஸ்.விஜயன், தனது பதிவில், ’’அன்றைய பிரதமர் இந்திரா காந்தியின் 20 அம்ச திட்டத்திலுள்ள ‘விதவைகள் மறுவாழ்வு திட்டம்’ என்ற அம்சத்தின்படி ‘அவருக்கு மறுவாழ்வு அளிக்கத்தயார்’ என்று சுவரில் எழுதியதற்காகத்தான் ஸ்டாலின் சிறையில் அடைக்கப்பட்ட ‘வீர வரலாறு’ என்ற
 

தேர்தல் காலம் வந்துவிட்டதால் எங்கெங்கும் ஒரே விளம்பர மயமாக இருக்கிறது. திரும்பிய பக்கமெல்லாம் கட்சியினரின் சுவர் விளம்பரங்கள்தான், போஸ்டர்கள்தான், பேனர்கள்தான்.

இந்த நேரத்தில் சுவர் விளம்பரத்தினால் சிறை சென்ற ஸ்டாலினின் வீர வரலாறு குறித்து மூத்த பத்திரிகையாளர் இதயக்கனி எஸ்.விஜயன், தனது பதிவில்,

’’அன்றைய பிரதமர் இந்திரா காந்தியின் 20 அம்ச திட்டத்திலுள்ள ‘விதவைகள் மறுவாழ்வு திட்டம்’ என்ற அம்சத்தின்படி ‘அவருக்கு மறுவாழ்வு அளிக்கத்தயார்’ என்று சுவரில் எழுதியதற்காகத்தான் ஸ்டாலின் சிறையில் அடைக்கப்பட்ட ‘வீர வரலாறு’ என்ற உண்மை, எத்தனை காங்கிரஸாருக்கு தெரியும் ? அந்த சொரணை சோனியாவுக்கும், மகன் ராகுலுக்கும் இல்லாத போது மற்றவர்களிடம் நாம் எதிர்பார்க்க முடியுமா ?

இப்படி ‘தரமான சம்பவங்கள்’ கருணாநிதி குடும்பத்தில் நிறைய உண்டு’’என்று குறிப்பிட்டிருக்கிறார்.

திமுகவினர் செய்த ரகளையினால் இந்திராகாந்தியின் ஆடையில் ஏற்பட்ட ரத்தத்தை, மாதவிடாய் ரத்தம் என்றவர் கருணாநிதி. இந்திராகாந்திக்கு மறுவாழ்வு அளிக்க தயார் என்ற விளம்பரத்தால் சிறை சென்றவரா ஸ்டாலின். தரமான சம்பவம்தான் என்ற பரபரப்பு பேச்சு எழுந்திருக்கிறது.