×

சமஸ்கிருத செய்தி ஒளிபரப்பு தொடரும்… அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பதில்

சமஸ்கிருத செய்தி ஒளிபரப்பு தொடரும் என்று ரவிக்குமார் எம்.பி. கேள்விக்கு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பதில் அளித்துள்ளார். வட்டார வழக்கு மொழியில் நிகழ்ச்சி தயாரிப்பதை/ ஒளிபரப்புவதைக் கைவிடுவதென பிரசார் பாரதி முடிவு செய்திருப்பது குறித்து ரவிக்குமார் எம்.பி மக்களவையில் கேள்வி எழுப்பினார்: அதற்கு, வட்டார வழக்கு நிகழ்ச்சிகளை ரத்துசெய்வதென்று முடிவு எடுக்கப்படவில்லையென பிரசார் பாரதி தெரிவித்துள்ளது. தமது சேவைகளை வலுப்படுத்தவும்,புதிய நேயர்களைக் கவரவும் தூரதர்ஷனும் ஆல் இண்டியா ரேடியோவும் குறிப்பிட்ட காலங்களில் நிகழ்ச்சிகளை ஒளி/ஒலி பரப்புமாறு பிரசார்
 

சமஸ்கிருத செய்தி ஒளிபரப்பு தொடரும் என்று ரவிக்குமார் எம்.பி. கேள்விக்கு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பதில் அளித்துள்ளார்.

வட்டார வழக்கு மொழியில் நிகழ்ச்சி தயாரிப்பதை/ ஒளிபரப்புவதைக் கைவிடுவதென பிரசார் பாரதி முடிவு செய்திருப்பது குறித்து ரவிக்குமார் எம்.பி மக்களவையில் கேள்வி எழுப்பினார்:

அதற்கு, வட்டார வழக்கு நிகழ்ச்சிகளை ரத்துசெய்வதென்று முடிவு எடுக்கப்படவில்லையென பிரசார் பாரதி தெரிவித்துள்ளது.

தமது சேவைகளை வலுப்படுத்தவும்,புதிய நேயர்களைக் கவரவும் தூரதர்ஷனும் ஆல் இண்டியா ரேடியோவும் குறிப்பிட்ட காலங்களில் நிகழ்ச்சிகளை ஒளி/ஒலி பரப்புமாறு பிரசார் பாரதி கூறியுள்ளது. அந்தவிதத்தில் தூரதர்ஷன் சேனல்கள் தினந்தோறும் சமஸ்கிருத செய்திகளையும் , வாரம் ஒருமுறை செய்தித் தொகுப்புகளையும் ஒலிபரப்பி வருகின்றன என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.