×

ஆதரவாளர்களுடன் திருநாவுக்கரசர் அவசர ஆலோசனை! காங்கிரஸ் கோஷ்டி பூசல்!

காங்கிரசுக்குள் இருக்கும் கோஷ்டிபூசல் திமுக மேடையிலும் வெடித்தது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக கூட்டணி கட்சி்யினர் சார்பில் நடந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு காங்கிரசு சார்பில் திருநாவுக்கரசுவும், தங்கபாலுவும் வந்திருந்தனர். இருவரில் திருநாவுக்கரசுதான் முதலில் வந்தாலும் அவருக்கு தலைவருக்கு உரிய நாற்காலி கொடுக்கப்படவில்லை. பேசுவதற்கு மைக்கும் கொடுக்கவில்லை. ஆனால், பின்னர் வந்த தங்கபாலுவுக்கு தலைவருக்கு உரிய நாற்காலி கொடுத்தார்கள். இதனால் திருநாவுக்கரசர் பாதியிலேயே எழுந்து போய்விட்டார். இந்த விவகாரத்தினால் சென்னை அண்ணாநகரில் உள்ள திருநாவுக்கரசர் வீட்டில் ஆதரவாளர்கள் குவிந்தனர்.
 

காங்கிரசுக்குள் இருக்கும் கோஷ்டிபூசல் திமுக மேடையிலும் வெடித்தது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக கூட்டணி கட்சி்யினர் சார்பில் நடந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு காங்கிரசு சார்பில் திருநாவுக்கரசுவும், தங்கபாலுவும் வந்திருந்தனர். இருவரில் திருநாவுக்கரசுதான் முதலில் வந்தாலும் அவருக்கு தலைவருக்கு உரிய நாற்காலி கொடுக்கப்படவில்லை. பேசுவதற்கு மைக்கும் கொடுக்கவில்லை. ஆனால், பின்னர் வந்த தங்கபாலுவுக்கு தலைவருக்கு உரிய நாற்காலி கொடுத்தார்கள். இதனால் திருநாவுக்கரசர் பாதியிலேயே எழுந்து போய்விட்டார்.

இந்த விவகாரத்தினால் சென்னை அண்ணாநகரில் உள்ள திருநாவுக்கரசர் வீட்டில் ஆதரவாளர்கள் குவிந்தனர். எம்.எல்.ஏக்கள், எம்,பிக்கள் என திருநாவுக்கரசரின் ஆதரவாளர்கள் அத்தனை பேருமே காலை 11 மணி முதல் பிற்பகல் வரைக்கும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர்.

இதையடுத்து காங்கிரஸ் புதிய நிர்வாகிகள் நியமனத்தில் தனது ஆதரவாளர்களுக்கும் சம பங்கு வேண்டும் என்று திடீர் போர்க்கொடி தூக்கி இருக்கிறார் திருநாவுக்கரசர்.

மேலும், கட்சிக்குள் இருக்கும் சில முக்கிய பிரச்சனைகளை ராகுலை நேரில் சந்தித்து சொல்லப்போகும் முடிவிலும் இருக்கிறாராரம் திருநாவுக்கரசர்.

இந்த கோஷ்டி பூசலாம் காங்கிரசுக்குள் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது.