×

பாமக மீது சீமான் கடும் தாக்கு

தமிழீழ விடுதலை செயற்பாட்டாளர் அப்பையா சிறிதரன் நினைவைப் போற்றும் வீரவணக்க நிகழ்வு நாம் தமிழர் கட்சியினர் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் அனுசரித்தனர். கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அப்பையா சிறிதரனுக்கு மலர்தூவி மரியாதை செய்தார். பின்னர் கட்சியினர் அனைவரும் முழக்கங்கள் எழுப்பினர். பின்னர் செய்தியார்களை சந்தித்த சீமானிடம் பாமகவினர் நடத்தி வரும் இருபது சதவிகித இடஒதுக்கீடு போராட்டம் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு சீமான் வன்னியர்களுக்கு இருபது சதவிகித இடஒதுக்கீடு கோரும் பாமக, முற்பட்ட
 

தமிழீழ விடுதலை செயற்பாட்டாளர் அப்பையா சிறிதரன் நினைவைப் போற்றும் வீரவணக்க நிகழ்வு நாம் தமிழர் கட்சியினர் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் அனுசரித்தனர்.

கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அப்பையா சிறிதரனுக்கு மலர்தூவி மரியாதை செய்தார். பின்னர் கட்சியினர் அனைவரும் முழக்கங்கள் எழுப்பினர்.


பின்னர் செய்தியார்களை சந்தித்த சீமானிடம் பாமகவினர் நடத்தி வரும் இருபது சதவிகித இடஒதுக்கீடு போராட்டம் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு சீமான் வன்னியர்களுக்கு இருபது சதவிகித இடஒதுக்கீடு கோரும் பாமக, முற்பட்ட வகுப்பில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான பத்து சதவிகித இடஒதுக்கிட்டை ஆதரிப்பது ஏன்? என்ற கேள்வியை எழுப்பினார்.
ரஜினி கட்சித் தொடர்பான கேள்விக்கு ரசிகர்களைக் கூட சரியாக வழிநடத்த முடியாத ரஜினி எப்படி நாட்டை வழிநடத்துவார் என்று கேட்டார்.