அவரெல்லாம் ஒரு ஆளா? அவர் கூப்பிட்டா நான் போகணுமா?முதல்வர் ஆவேசம்
2ஜி வழக்கில் தன் மீது குற்றம் சுமத்தியதால் முதல்வரை நேருக்கு நேர் விவாதத்திற்கு அழைத்தார் திமுக பொதுச்செயலாளர் ஆ.ராசா. அதுவும், சொடக்கு போட்டு அழைத்தார். சவால் விட்டு இத்தனை நாட்கள் ஆகியும் ஏன் தன்னுடன் விவாதத்திற்கு வரவில்லை என்றும் கேள்வி எழுப்பி வருகிறார் ராசா.
இதுகுறித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ‘’அவரெல்லாம் ஒரு ஆளா? அவர் கூப்பிட்டா நான் போகணுமா? திமுகவுக்கு வேண்டுமானால் அவர் பெரிய ஆளாக இருக்கலாம். அவருகிட்ட பணம் நிறைய இருக்குது. திமுகவுக்கு அப்பப்ப பணம் தேவைப்படும் போதெல்லாம் அவரிடம் இருந்து பணம் வாங்குவதற்காக அவரை பக்கத்திலேயே வச்சிருக்காங்க’’ என்று ஆவேசப்பட்டவர்,
‘’2ஜி வழக்கில் அவர் குற்றவாளி இல்லை என்றால் ஏன் அவரை சிறையில் அடைத்தார்கள்? ‘’ என்ற கேள்வியை எழுப்பினார்.