×

சாலையோரம் நின்ற மணமக்கள்: ஆசி வழங்கும்போது முதல்வர் செய்த காரியத்தால் உறவினர்கள் நெகிழ்ச்சி

காரில் பறந்தாலும் சாலையோரம் நிற்பவர்களையும், அவர்களின் எண்ண ஓட்டத்தையும் அறிந்து, கொஞ்சமும் தயக்கம் இல்லாமல் காரை விட்டு இறங்கி, அவர்களிடம் பேசி நெகிழ வைக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. தூத்துக்குடியில் அரசு மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு காரில் திரும்பியபோது, சாலையோரம் கையில் மனுவுடன் மாற்றுத்திறனாளி பெண் நின்றிருப்பதை கண்டு, காரை நிறுத்தச்சொன்ன முதல்வர், அப்பெண்னை (மாரீஸ்வரி) அழைத்து மனுவை பெற்றுக்கொண்ட 2 மணி நேரத்தில் அம்மனுவில் கோரியிருந்தபடிய அரசு மருத்துவமனையில் வேலை போட்டுகொடுத்தார் முதல்வர். ’முதல்வன்
 

காரில் பறந்தாலும் சாலையோரம் நிற்பவர்களையும், அவர்களின் எண்ண ஓட்டத்தையும் அறிந்து, கொஞ்சமும் தயக்கம் இல்லாமல் காரை விட்டு இறங்கி, அவர்களிடம் பேசி நெகிழ வைக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

தூத்துக்குடியில் அரசு மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு காரில் திரும்பியபோது, சாலையோரம் கையில் மனுவுடன் மாற்றுத்திறனாளி பெண் நின்றிருப்பதை கண்டு, காரை நிறுத்தச்சொன்ன முதல்வர், அப்பெண்னை (மாரீஸ்வரி) அழைத்து மனுவை பெற்றுக்கொண்ட 2 மணி நேரத்தில் அம்மனுவில் கோரியிருந்தபடிய அரசு மருத்துவமனையில் வேலை போட்டுகொடுத்தார் முதல்வர்.

’முதல்வன் பட பாணியில் முதல்வர்’என்று மக்கள் அச்செயலை பாராட்டினர்.

இந்நிலையில், கடலூர் பயணத்தின்போது சாலையோரம் நின்றிருந்த மணமக்களை, காரை விட்டு இறங்கி, வாழ்த்துவிட்டு சென்றிருக்கிறார் முதல்வர்.

நிவர் புயலால் அதிகம் பாதிப்புக்கு உள்ளான கடலூர் மாவட்டத்தை பார்வையிட நேற்று முன் தினம் காரில் சென்றார் முதல்வர். அப்போது வழியில் சாலையோரம் மணமக்கள் நின்று தனக்கு வணக்கம் வைத்ததைக்கண்டு, உடனே காரை நிறுத்தச்சொன்னதும், காரின் அருகே சென்று ஆசி வாங்க ஓடினர் மணமக்கள். கூடவே உறவினர்களும் ஓடினர். ஆனால் அவர்கள் கொஞ்சமும் எதிர்பாராத வகையில் முதல்வர், காரை விட்டு இறங்கி மணமக்கள் அருகே சென்றதும், மணமக்களுக்கும், உறவினர்களுக்கும் அளவில்லாத மகிழ்ச்சி.

முதல்வர் தங்கள் அருகே வந்ததும் ஆசி வாங்குவதற்காக அவர் காலில் விழுந்தனர் மணமக்கள். அப்போது முதல்வர் கால் செருப்பை கழட்டி வைத்துவிட்டு மணமக்களுக்கு ஆசீர்வாதம் வழங்கி வாழ்த்தியதை கண்டு உறவினர்களும், ஊர் மக்களும் நெகிழ்ந்தனர்.

இந்த நிகழ்வை அப்பகுதியினர் செல்போனில் படம் பிடித்து, வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். அந்த வீடியோ வைரலாகி பலரையும் நெகிழ வைக்கிறது.