×

ஒரு லட்சம் உணவு பொட்டலங்கள் 14ம் தேதி வரை வழங்கப்படும்.. அமைச்சர் பி.கே. சேகர்பாபு

முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, கொரோனா பெருந்தொற்று காரணமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் ஜூன் 14 வரை இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தினமும் ஒரு லட்சம் உணவுப் பொட்டலங்கள் தொடர்ந்து வழங்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு. அவர் மேலும் இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘’தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்று காரணமாக பெரும்பாலான ஏழை எளிய மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து அன்றாட வாழ்க்கைக்கு போராடிவரும் நிலையில், அவர்களது பசியைப் போக்கும் விதமாகவும் அரசு
 

முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, கொரோனா பெருந்தொற்று காரணமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் ஜூன் 14 வரை இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தினமும் ஒரு லட்சம் உணவுப் பொட்டலங்கள் தொடர்ந்து வழங்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு.

அவர் மேலும் இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘’தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்று காரணமாக பெரும்பாலான ஏழை எளிய மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து அன்றாட வாழ்க்கைக்கு போராடிவரும் நிலையில், அவர்களது பசியைப் போக்கும் விதமாகவும் அரசு மருத்துவமனைகளில் கொரோனா பெரும் தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள், அவர்களின் உதவியாளர்கள் மற்றும் உணவு தேவைப்படும் நபர்களுக்கு 12 .5. 2021 முதல் 5. 6. 2021 வரை நாள்தோறும் ஒரு லட்சம் உணவு பொட்டலங்கள் திருக்கோயில்கள் மூலம் வழங்குமாறு ஏற்கனவே வெளியிடப்பட்டு, செயல்படுத்தப்பட்டது.

இந்நிலையில் ஊரடங்கு காலம் மேலும் 14. 6 .2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. உணவுப் பொட்டலம் ஏழை நோயாளிகள் அவர்களின் உதவியாளர்கள் மற்றும் உணவு தேவைப்படும் நபர்களுக்கு தொடர்ந்து வழங்கியதாகவும், இதனால் தேவைப்படும் கூடுதல் நிதிக்கு இந்து சமய அறநிலையத் துறையில் பேணப்பட்டு வரும் அன்னதான திட்ட நிதியிலிருந்து தேவைப்படும் திருக்கோயில்களுக்கு வழங்கிட உத்தரவிட்டுள்ளதை மன மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.