×

2020 தேதியில் கவனமாக இருக்க வேண்டிய ஆண்டு!

இன்னும் சில நாட்களில் வர இருக்கும் 2020ம் ஆண்டை எண் வடிவில் குறிப்பிடும்போது சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது எனவே கவனமாக இருக்க வேண்டும் என்று சமூக ஊடகங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகிறது. இன்னும் சில நாட்களில் வர இருக்கும் 2020ம் ஆண்டை எண் வடிவில் குறிப்பிடும்போது சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது எனவே கவனமாக இருக்க வேண்டும் என்று சமூக ஊடகங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டு பிறக்கும்போதும், அதில் சிறப்பு,
 

இன்னும் சில நாட்களில் வர இருக்கும் 2020ம் ஆண்டை எண் வடிவில் குறிப்பிடும்போது சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது எனவே கவனமாக இருக்க வேண்டும் என்று சமூக ஊடகங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகிறது.

இன்னும் சில நாட்களில் வர இருக்கும் 2020ம் ஆண்டை எண் வடிவில் குறிப்பிடும்போது சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது எனவே கவனமாக இருக்க வேண்டும் என்று சமூக ஊடகங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு ஆண்டு பிறக்கும்போதும், அதில் சிறப்பு, பிரச்னை என்று ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றி சமூக ஊடகங்களில் தகவல் வெளியாவது வழக்கமாகவே உள்ளது. ஆனால், அவை பெரும்பாலும் வதந்தி ரகமாகவே உள்ளன. ஆனால், இந்த ஆண்டு பரவும் தகவலை அப்படி ஒதுக்கித் தள்ளிவிட முடியவில்லை.

2020 என்று முழுமையாக எழுதுவதற்குப் பதில், 20 என்று மட்டும் எழுதினால், அந்த இருபதுக்குப் பிறகு கூடுதலாக எந்த ஒரு இரண்டு இலக்க எண்ணை எளிதில் சேர்க்க முடியும். இதனால் பிரச்னை ஏற்படலாம் என்று அதில் குறிப்பிட்டுள்ளனர். வழக்கமாக 1-1-2019 என்பதை 1-1-19 என்று கூட எழுதுவோம். இதனால் எந்த பிரச்னையும் இல்லை. இதுவே 1-1-2020 என்று வைத்துக்கொள்ளுங்கள், அதை 1-12-20 என்று மட்டுமே ஏதேனும் ஆவணங்களில் குறிப்பிட்டால் அதை ஃபோர்ஜரி செய்ய நினைக்கும் நபர்கள் கூடுதலாக இரண்டு எண்களைச் சேர்த்து அதற்கு சிக்கல் ஏற்படுத்திவிடலாம்.

அதாவது வெறும் 20 என்று குறிப்பிட்டால் அதன் பிறகு 10, 15, 21 என எந்த ஒரு இரண்டு இலக்க எண்ணைச் சேர்த்தாலும் பிரச்னை ஏற்பட்டுவிடும். 20ம் ஆண்டு வாங்கினேன் என்று மொட்டையாக குறிப்பிட்டீர்கள் என்றால், வில்லங்கம் செய்ய நினைக்கும் நபர் 20 உடன் 15 என்று எழுதிவிட்டால், 2020க்கு பதில் 2015 ஆக அது மாறிவிடும். அது ஏதாவது ஒரு வில்லங்கத்தை ஏற்படுத்திவிடலாம்.
நீங்கள் தேதியை 1-1-2020 என்று குறிப்பிடுகின்றீர்களா, 1/1/2020 என்று குறிப்பிடுகின்றீர்களா என்பதில் பிரச்னை இல்லை.

ஆனால், எழுதும்போது முழுவதுமாக எழுதுங்கள். நீங்கள் பெறும் ஆவணங்களிலும் முழுமையாக எழுதப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். இதன் மூலம் நீங்கள் ஏமாறவோ, ஏமாற்றம் அடைவதையோ தடுக்க முடியும் என்கிறது அந்த பதிவு. கூடுதலாக இரண்டு எண்கள்தானே… கவனத்துடன் இருப்போம்!