×

உங்கள் எடை குறைப்பிற்காக இந்த தவறுகளையெல்லாம் செய்யாதீங்க..!

இப்போதுள்ள காலகட்டத்தில் உடல் எடை குறைப்பு என்கிற விசயத்தில் எல்லோருக்கும் ஆர்வம் அதிகமாகவே இருக்கிறது.ஆனால் ,எல்லோரும் முறையான பயிற்சிகளாலும் ,உணவு பழக்கங்களாலும் குறைக்கிறார்களா என்றால் அதுதான் இல்லை.விளம்பரங்களில் வரும் மாத்திரையில் தொடங்கி ஏகப்பட்ட தவறான வழி முறைகளை அவர்களாகவே பின்பற்றுகிறார்கள்.அது மிகவும் ஆபத்தானது. இப்போதுள்ள காலகட்டத்தில் உடல் எடை குறைப்பு என்கிற விசயத்தில் எல்லோருக்கும் ஆர்வம் அதிகமாகவே இருக்கிறது.ஆனால் ,எல்லோரும் முறையான பயிற்சிகளாலும் ,உணவு பழக்கங்களாலும் குறைக்கிறார்களா என்றால் அதுதான் இல்லை. விளம்பரங்களில் வரும் மாத்திரையில் தொடங்கி
 

இப்போதுள்ள காலகட்டத்தில் உடல் எடை குறைப்பு  என்கிற விசயத்தில் எல்லோருக்கும் ஆர்வம் அதிகமாகவே இருக்கிறது.ஆனால் ,எல்லோரும் முறையான பயிற்சிகளாலும் ,உணவு பழக்கங்களாலும் குறைக்கிறார்களா என்றால் அதுதான் இல்லை.விளம்பரங்களில் வரும் மாத்திரையில் தொடங்கி ஏகப்பட்ட தவறான வழி முறைகளை அவர்களாகவே பின்பற்றுகிறார்கள்.அது மிகவும் ஆபத்தானது.

இப்போதுள்ள காலகட்டத்தில் உடல் எடை குறைப்பு  என்கிற விசயத்தில் எல்லோருக்கும் ஆர்வம் அதிகமாகவே இருக்கிறது.ஆனால் ,எல்லோரும் முறையான பயிற்சிகளாலும் ,உணவு பழக்கங்களாலும் குறைக்கிறார்களா என்றால் அதுதான் இல்லை.

விளம்பரங்களில் வரும் மாத்திரையில் தொடங்கி ஏகப்பட்ட தவறான வழி முறைகளை அவர்களாகவே பின்பற்றுகிறார்கள்.அது மிகவும் ஆபத்தானது.இன்னும் சிலர், Intermittent fasting என்று சொல்லப்படும் இடைக்கால விரதம் இருக்கிறார்கள். அதென்ன இடைக்கால விரதம் என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள்.

ஒரு நாளைக்கு எல்லோரும் மூன்று வேளை சாப்பிடுவதுதான் பொதுவான பழக்கமாக இருக்கிறது.உடலை கட்டுக்கோப்பாக வைக்க விரும்புகிறவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக உணவு,காய்கறி,பழங்கள்,நான் வெஜ் என்று பிரித்து ஐந்து வேளை சாப்பிடுவார்கள்.

எல்லோரும் இந்த முறையை கடைப்பிடிப்பது கொஞ்சம் சிரமமான வேலைதான். அநியாயத்துக்கு கணக்கு வழக்கே இல்லாமல் சாப்பிட்டு குண்டாக மாறியவர்கள் மறுபடியும் உடலைக் குறைக்க முயற்சி செய்யும் போது, உடனடி பலன் வேண்டும் என்பதற்காக ஒரு முறை சாப்பிட்டால் அடுத்து எப்போது பசிக்குதோ அப்போதுதான் சாப்பிடுவார்கள்.  இதற்கு பெயர்தான் Intermittent fasting எனச் சொல்லப்படும் இடைக்கால விரதம்.

இந்த முறையில் உடல் எடைக்குறைப்பு முயற்சி செய்யும் போது நீங்கள் நினைக்கிற மாதிரி விரைவாகவே எடை குறையும் என்பது உண்மைதான்.அதனால் ஏற்படும் பக்க விளைவுகளால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி பலருக்கும் தெரிவதில்லை என்பதுதான் உண்மை.இப்போது கீழே சொல்லப்பட்டிருக்கிற அறிகுறிகளை நீங்கள் எப்போதாவது உணர்ந்திருந்தால் உடனடியாக உங்கள் உங்கள் டயட் பிளானை மாற்றுங்கள் ; அதுதான் உங்களுக்கும் உங்கள் உடல் நலனுக்கும் நல்லது! 

1.எரிச்சல் உணர்வு :

நீங்கள் இந்த விரதத்தை மேற்கொள்ளும்போது ஒருவித எரிச்சல் உணர்வை நீங்கள் பெற்றால் உங்களுக்கு இந்த டயட் ஒத்துக்கொள்ளவில்லையென்று அர்த்தம்.உங்களால் 16 மணிநேரம் தொடர்ந்து பசியை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் இதை உடனடியாக நிறுத்துவது உங்களுக்கும் உங்கள் உடல்நலன்  மற்றும் மனநலனுக்கும் நல்லது. இல்லையென்றால் இந்த டயட் உங்களை மேலும் உடல் எடை அதிகரிப்பதோடு மேற்கொண்டு பல உடல் மற்றும் மனம் சம்மந்தப்பட்ட  பிரச்சனைகள் தாக்கும்.

2.களைப்பு மற்றும் மூளை மந்தம்:

நீங்கள் உணவில்லாமல் நெடு நேரம் இருந்தால் உங்களுக்கு களைப்பாக இருக்குமானால் உங்கள் உடல் இந்த டயட் பிளானை ஏற்கவில்லை,மேலும் இது உங்கள் மூளை செயல் திறனையும் கூட பாதிக்கும்.

3.குறைந்த சர்க்கரை அளவுகள்:

உங்களுக்கு சர்க்கரைநோய் இருந்தால் கண்டிப்பாக இந்த டயட் எடுக்க கூடாது,இது உங்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை வெகுவாகக் குறைத்து விடும்.

இதனால் குறைந்த சர்க்கரையின் காரணமாக நாடித்துடிப்பு குறைந்து மயக்க நிலைக்கு போவதற்கான வாய்ப்புகள் அதிகம்.தவிர,தலைவலி வாந்தி தலைசுற்றல் ஆகியவைகளையும் சேர்த்து கொண்டுவந்துவிடும்.

4.மலசிக்கல்:

தொடர்ந்து நீங்கள் உணவெடுக்காமல் 16 மணி நேரங்கள் இருந்தால் உங்கள் செரிமான சக்தி பாதிக்கப்பட்டு வயிற்றுக்குடல் பிரச்சனைகளை வரவழைத்துவிடும்.

நீங்கள் சரியான நேரத்தில் சாப்பிட்டு தண்ணீர் குடிக்காமல் இருந்தால் உடலில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு தேவையான அளவு புரதம், வைட்டமின்ஸ் நார்சத்து ஆகியவை கிடைக்காமல் போய்விடும். நீங்கள் இந்த டயட் தொடர்ந்ததும் உங்களுக்கு மலம் கழிப்பதில் சிரமம் ஏற்பட்டால் இந்த செயல்முறையை உடனடியாக நிறுத்துவதே சரியான ஆலோசனை.

5.முடி உதிர்வு:

குறைந்த போஷாக்கு குறிப்பாக புரதம் வைட்டமின் B இதனுடன் சீரற்ற உடல் எடை மாற்றங்கள் ஆகியவை முடி உதிர்வுக்கு வித்திடும்.மேலும்,உங்களுக்கு இந்த இடைக்கால டயட் பிளானை பின்பற்றி வழக்கத்தைவிட அதிகமான உணவினை எடுத்துகோள்ளுதல் சற்று சிரமமாகத்தான் இருக்கும்

இருப்பினும் உங்கள் உடலுக்கு வேண்டிய அத்தியாவசிய சத்துக்களை எடுத்துக்கொள்ளுதல் அதிக அவசியமே! உங்கள் முடி அதிகளவு உதிர்ந்தால் உங்களின் தினசரி உணவு பழக்கத்தை சரிபார்த்து தேவையான சத்துக்களை சேர்த்து கொள்ள வேண்டும்.

6.தூக்கம் கோளாறுகள்:

பலரும் இந்த டயட் பிளானை மேற்கொண்டு தூங்குவதில் நல்ல முன்னேற்றங்களை பெற்றுள்ளனர் என்று கூறினாலும் நெட்சர் அண்ட் சயின்ஸ் ஆப் ஸ்லீப் என்ற பத்திரிகையில் வெளிவந்த தகவலின் படி இந்த இடைக்கால விரதத்தினால் சீரான தூக்கமான REM – Random Eye Movement என்று சொல்லப்படும் தூக்கம் பாதிப்படைகிறது.

இந்த வகை தூக்கம் மெமரி,கான்சன்ட்ரேஷன்,கூர்மையான சிந்தனை ஆகியவைகளுடன் சம்மந்தப்பட்ட ஒன்று.இந்த டயட் பிளானை எடுத்துக்கொண்டு உங்களுக்கு சரிவர தூக்கமில்லை என்றால் உங்கள் மருத்துவரை அணுகுவது அறிவுறுத்தப்படுகிறது.

7.மாதவிடாய் கோளாறுகள்:

உங்கள் உடலுக்கு நீங்கள் சரியான கலோரிகள் தரவில்லையானால் அது உங்கள் மாதவிடாய் சுழற்சியை பாதிக்கும்.திடீர் உடலெடை குறைப்பு உங்கள் ஹார்மோன் சுழற்சியை பதித்து மாதவிடாய் பாதிப்பையும் ஏற்படுத்தும்.உடல் எடையை அதிகம் குறைத்தால் உங்கள் உடல் செயல்பட தேவையான கலோரிகளையும் நீங்கள் சேர்த்து குறைக்கிறீர்கள்.

ஆதலால் நீங்கள் உங்கள் இடைக்கால விரதத்தில் மேற்கூறிய பிரச்சனைகளை சந்தித்தால் உடனடியாக இந்த செயல்முறையை நிறுத்துவது உங்கள் நல்லாரோக்கியத்திற்கு உதவும்.