×

எழவெடுத்த கொரானாவிலிருந்து நுரையீரலை பலப்படுத்த உதவும் இந்த உணவுகள்

கொரோனா 2ஆம் அலையிலிருந்து இந்தியா மீண்டு சில மாதங்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில், கொரோனா 3ஆம் அலை அடுத்த மாதம் தொடங்க வாய்ப்புள்ளதாக எஸ்பிஐ வல்லுநர் குழு கணித்துள்ளது கொரோனா இரண்டாம் அலை இப்போது தான் மெல்லக் கட்டுக்குள் வந்துள்ளது. தினசரி வைரஸ் பாதிப்பு 40 ஆயிரமாகக் குறைந்துள்ளது. ஆனால், அதற்குள் கொரோனா 3ஆம் அலை பற்றிப் பரவும் தகவல்கள் கவலையை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. நாட்டில் ஏற்படும் கொரோனா 3ஆம் அலை குறித்து பல்வேறு ஆய்வாளர்களும்
 

கொரோனா 2ஆம் அலையிலிருந்து இந்தியா மீண்டு சில மாதங்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில், கொரோனா 3ஆம் அலை அடுத்த மாதம் தொடங்க வாய்ப்புள்ளதாக எஸ்பிஐ வல்லுநர் குழு கணித்துள்ளது

கொரோனா இரண்டாம் அலை இப்போது தான் மெல்லக் கட்டுக்குள் வந்துள்ளது. தினசரி வைரஸ் பாதிப்பு 40 ஆயிரமாகக் குறைந்துள்ளது. ஆனால், அதற்குள் கொரோனா 3ஆம் அலை பற்றிப் பரவும் தகவல்கள் கவலையை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. நாட்டில் ஏற்படும் கொரோனா 3ஆம் அலை குறித்து பல்வேறு ஆய்வாளர்களும் தங்கள் கணிப்புகளைக் கூறி வருகின்றனர்.

நாட்டில் கொரோனா 2ஆம் அலை ஏப்ரல் மாதம் தொடங்கி, மே 7ஆம் தேதி உச்சமடைந்தது. இதனால் டெல்லி, மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் நாட்டில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.நமக்கு தற்போதுள்ள தரவுகளை வைத்துப் பார்த்தால் ஜூலை மாதம் தினசரி பாதிப்பு 10 ஆயிரமாக இருக்கும். ஆனால் இது ஆகஸ்ட் மாதம் அதிகரிக்கத் தொடங்கும். செப்டம்பரில் உச்சமடையும் என்றுகணிப்புகளைக் கூறி வருகின்றனர்.அதனால் நம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி ,ஆக்சிஜென் கிடைக்கும் உணவுகளை இப்போதிலிலிருந்தே எடுத்துக்கொள்ள வேண்டும் அதற்கான வழிகளை கூறியுள்ளோம்

பொதுவாக மனிதன் உயிர் வாழ்வதற்கு ஆக்ஸிஜன் மிகவும் இன்றியமையாதது என்பது அனைவருக்குமே தெரியும். மனித உடலில் ஓடும் இரத்தத்தில் போதுமான அளவு ஆக்ஸிஜன் இருந்தால் தான், உடலுறுப்புக்கள் சிறப்பாக இயங்கும்.

ஆனால் நுரையீரல் நோய், ஆஸ்துமா, இரும்புச்சத்து குறைபாடான இரத்த சோகை போன்றவற்றால், உடலில் ஆக்ஸிஜனின் அளவு குறைவாக இருக்கும்.

ஒருவரது உடலில் ஆக்ஸிஜன் குறைவாக இருந்தால், அது பதற்றம், தலைவலி, மூச்சுவிடுவதில் சிரமம், வெளிரிய தோல், உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றால் அவஸ்தைப்படக்கூடும்.

எனவே இவற்றை தடுக்க வேண்டுமாயின் நல்ல ஆரோக்கியமான உணவுகளை எடுத்து கொள்வது நல்லதாகும். அந்தவகையில் ஆக்சிஜன் அளவு அதிகரிக்க என்ன மாதிரியான உணவுகளை எடுத்து கொள்ளலாம் என பார்ப்போம்.

பீட்ரூட்

 பீட்ரூடை பச்சையாக சாப்பிடும்போது, ​​சுழற்சியை மேம்படுத்துவதற்கும், இரத்தத்தை சுத்திகரிப்பதற்கும், கல்லீரலை வலுப்படுத்துவதற்கும் உதவுகிறது.

 இரும்பு மற்றும் ஆக்ஸிஜனேற்றிகளின் கலவை இரத்தத்தில் ஆக்ஸிஜனை அதிகரிப்பதை ஊக்குவிப்பதற்கும், இரத்தத்தை சுத்திகரிப்பதற்கும் பயன்படுகிறது.

 பெர்ரி

 அவுரிநெல்லிகள், ஸ்ட்ராபெர்ரி, மல்பெர்ரி, ராஸ்பெர்ரி- சீசன் இனிப்பு மற்றும் புளிப்பு பெர்ரிகளால் நிரம்பியுள்ளது. 

 இந்த பெர்ரி இயற்கையாகவே இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் மற்றும் உங்கள் இதய ஆரோக்கியத்திற்கு சிறப்பான நன்மைகளை கொடுக்கும்.

மாதுளை

ஜூஸ், இனிப்பு பழம் பாலிபீனால் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் நைட்ரேட்டுகளின் மிகவும் சக்திவாய்ந்த ஆதாரமாக இருப்பது மாதுளை.

 மென்மையான இரத்த ஓட்டத்திற்கு இரத்த நாளங்களை சீராக இயங்கவும் உதவுகிறது. நீங்கள் மாதுளை விதைகளை சாலட்களில் டாஸ் செய்யலாம் அல்லது அவற்றை ஜூஸ் செய்து அருந்தலாம்.

  பூண்டு

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கு பூண்டு, உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது.

 உடலில் சுற்றோட்ட மற்றும் செரிமான அமைப்புகளுக்கு உதவுதல், இரத்த அழுத்தத்தைக் குறைத்தல் மற்றும் இதய நோய்களை எதிர்த்துப் போராடுவது பூண்டின் தலைசிறந்த பண்புகளாகும்.