பல நோய்களை கொல்லும் தண்ணீர் வைத்தியம் .
நம் உடலில் செயல்பாடுகள் சிறப்பாக செயல் பட தண்ணீர் மிகவும் தேவையான ஒன்று ,நம் உடலின் தசைகள் 70 சதவீதம் தண்ணீராலும் ,மூளை 90 சதவீதம் தண்ணீராலும் 83 சதவீத தண்ணீரால் இரத்தமும் உருவாக்கப்பட்டுள்ளது .எனவே தண்ணீர் மிகவும் அவசியமான ஒன்று
தினமும் காலையில் தூங்கி எழுந்தவுடன் வெறும் வயிற்றில், பல்கூட விளக்காமல் சுமார் 1.50 லிட்டர் தண்ணீர் அல்லது 6 டம்ளர் தண்ணீரை குடிக்க வேண்டும்.
முதலில் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும் ஆனால் போக போக சரியாகிவிடும். 1.50 லிட்டர் தண்ணீர் அருந்த முடியாதவர்கள்,கொஞ்சம் கொஞ்சமாக, அதே நேரத்தில் சிறிய இடைவெளி விட்டும் குடிக்கலாம்.இப்படி நீர் அருந்துவதால் குடல் சுத்தமாகும் ,பசியைத் தூண்டும்,தலைவலியை தடுக்கும்,அல்சரைத் தடுக்கும்,எடையை குறைக்க உதவும்,பொலிவான சருமத்தைக் கொடுக்கும்
தண்ணீர் மருத்துவத்தின் சில நன்மைகள்
இதை சரியாக நாம் பின்பற்றினால்
முகம் பொலிவுபெரும்
உடலில் கொழுப்புகள் நீங்கி உடலின் எடை குறையும்
உடல் புத்துணர்வு பெரும்
ஜீரணசக்தி அதிகரிக்கும்
நாள் முழுவதும் உடல் சுறுசுறுப்பாக இருக்கும்
இரத்த அழுத்தம் நோய் நீங்கும்
சர்க்கரை வியாதி சரியாகும்