×

தூதுவளை இலையை  துவையலாக நம் உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் என்ன நன்மை தெரியுமா ?

 

பொதுவாக தூதுவளை இலை உடலில் இருக்கும் பிரச்சனைகளுக்கு மருந்தாக இருக்கிறது.இந்த தூதுவளை மூலம் நாம் என்ன ஆரோக்கியத்தை அடையலாம் என்று இப்பதிவில் காணலாம் 

1.தூதுவளை இலை பொதுவாகவே மருத்துவ குணங்கள் நிறைந்தது. இது நம் உடல் வலிமையை மேம்படுத்தும். 
2.இந்த இலையை தினமும் மென்று சாப்பிட்டால் ரத்தத்தின் சர்க்கரை அளவு குறையும். இந்த இலையை தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொண்டால் பல ஆரோக்கியத்திற்கு மருந்தாகும்.

3.தூதுவளையில் இலை மட்டுமில்லாமல் பூ காய் வேர் என அனைத்துமே மருத்துவ குணங்கள் உடையது. 4.தூதுவளை இலை அதனுடன் மிளகு சின்ன வெங்காயம் பூண்டு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

5.பிறகு நன்றாக அரைத்து துவையலாக நம் உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் கால்சியம் சத்து அதிகம் உள்ளது. மேலும் இது பித்தத்தை குறைக்கும்.

6.இது மட்டுமில்லாமல் தூதுவளை இலையை நன்றாக காய வைத்து பொடி ஆக்கி தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் ஜீரண சக்தி கொடுக்கும்.

7.தூதுவளையே அரைத்து அடை செய்து சாப்பிட்டு வந்தால் காது மந்தம், பெரு வயிறு மந்தம். போன்ற பிரச்சனைகளை சீராக்கும்.

8.தூதுவளை பழத்தை காய வைத்து பொடியாக்கி தேவைப்படும் நேரத்தில் தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் மார்பு சளி இருமல் போன்ற பிரச்சனையை நீக்க பெருமளவில் உதவுகிறது. 
9.மேலும் புற்றுநோயை குணப்படுத்த தூதுவளை ஒரு சிறந்த மருந்து. 
10.புற்றுநோய் செல்கள் ஏற்படாமல் காக்கும் ஆற்றலை தூதுவளை செய்யும். எந்தவித கட்டிகளும் வராது..