×

யாரெல்லாம் டீ குடிக்க கூடாது தெரியுமா ?

 

பொதுவாக தேநீர் அருந்துவது என்பது இன்று பலருக்கும் இருக்கும் பழக்கம் .ஆங்கிலேயர்கள் நம் நாட்டை ஆண்ட போது இந்த தேனீர் அருந்தும் பழக்கத்தை நமக்கு கற்று கொடுத்து விட்டு சென்று விட்டனர் ,ஆனால் அவர்கள் நம் நாட்டை விட்டு போனாலும் அவர்கள் விட்டு சென்ற ஆங்கில மொழி போல இந்த டீ குடிக்கும் பழக்கமும் நம் உடலோடு ஒட்டி கொண்டு விட்டது .இந்த தேனீர் பழக்கத்துக்கும் நம் நாட்டில் பலர் அடிமையாகி விட்டனர் .இந்த டீ குடிப்பது பலருக்கு பல பக்க விளைவுகளை உண்டாகும் .சிலருக்கு எந்த பாதிப்பையும் உண்டாக்காது .எனவே யாரெல்லாம் இந்த டீ குடிக்க கூடாது என்று பட்டியலிட்டுள்ளோம் .

1.இரவு வேலை செய்பவர்கள் தூக்கமின்றி பனி புரிய மாலையில் தேநீர் அருந்தலாம்.

2. மேலும் அசிடிட்டி மற்றும் இரைப்பை பிரச்சனை இல்லாதவர்கள் மாலையில் டீ குடிப்பதால் எந்த பாதிப்பும் வராது .

3.சரியான செரிமானம், வழக்கமான உணவு உட்கொள்ளல் மற்றும் தூக்கம் பிரச்சனை இல்லாதவர்கள் மாலையில் டீ குடிக்கலாம்.

4.தூக்கம் பிரச்சனை உள்ளவர்கள் மாலையில் தேநீர் அருந்துவதை தவிர்ப்பதால் இரவில் தூக்கமின்மை பிரச்சினை இருக்காது .

5.மேலும் மலச்சிக்கல், அமிலத்தன்மை அல்லது வாயு பிரச்சனை உள்ளவர்கள் டீயை அருந்தினால் ஆபத்து . , 6.எடை குறைவாக இருப்பவர்கள், முடி, தோல் மற்றும் பிற உடல்நலப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்கள் டீ மற்றும் காபியைத் தவிர்பது நல்லது என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்

7. வளர்சிதை மாற்றம் மற்றும் தன்னுடல் தாக்க நோய்களால் பாதிக்கப்பட்டவர்களும் தேநீர் அருந்தக்கூடாது. 8.ஹார்மோன் பிரச்னைகள் இருந்தால் உடனே தேநீர்  பழக்கத்தைத் தவிர்க்க வேண்டும்.