×

பொடுகு தொல்லையை போக்க என்ன செய்யணும்  தெரியுமா ?

 

பொதுவாக ஆண்களுக்கும் ,பெண்களுக்கும் தலை முடியில் உண்டாகும் பிரச்சினை எதுவென்றால் அது பொடுகு பிரச்சினைதான் .இந்த பொடுகு பிரச்சினைக்கு பின்வரும் காரணங்கள் இருக்கலாம் 
வறண்ட சருமம், ஹார்மோன்களின் அளவில் ஏற்படும் மாறுபாடு, பூஞ்சை போன்ற நுண்ணுயிரித் தொற்றுகள், மனஅழுத்தம், முறையற்ற உணவுப் பழக்கம், தலையைச் சுத்தமற்று இருப்பது போன்ற காரணங்களினால் பொடுகு பிரச்சினையானது உருவாகின்றது.இந்த பொடுகு பிரச்சினையை எப்படி போக்கலாம் என்று நாம் காணலாம் 

1.பொடுகு தொல்லையை போக்க கொஞ்சம் எலுமிச்சைச் சாறு, தேங்காய் எண்ணெய் 2 தே.கரண்டி சேர்த்து, தலைமுடியில் மசாஜ்  செய்து  20 நிமிடங்கள் வரை ஊறவைக்க வேண்டும். 
2.பின் அந்த கலவையுடன்  ஷாம்பூ தேய்த்து, தலையை அலசி எடுத்து வர பொடுகு தொல்லையானது நீங்கும்.
3.அடுத்த பொடுகு சிகிச்சையாக முதலில் தயிரை தலை முடியில் நன்றாக தேய்த்துக்கொள்ள வேண்டும். 
4.ஒரு மணி நேரம் கழித்த பின்னர் , சிறிது ஷாம்பூ போட்டுக் குளிக்கலாம். இதை  சைனஸ், ஒற்றைத் தலைவலி  இருப்பவர்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.  
5.அடுத்த பொடுகு சிகிச்சையாக முதல்லி ஈரமான முடியில் பேக்கிங் சோடாவை தேய்க்கவும். தேய்த்து இரண்டு நிமிடத்தில் முடியை தண்ணீரில் கழுவ வேண்டும். 
6.இது செய்வதன் மூலம் தலையில் உள்ள இறந்த செல்கள் நீங்கும். மற்றும் பொடுகு தொல்லையானது முற்றிலும் நீங்கும்.
7.அடுத்த பொடுகு சிகிச்சையாக வேப்பிலையை முதல்லி பேஸ்ட் போன்று அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். 
8.பின் அதை தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.  
9.அடுத்த பொடுகு சிகிச்சையாக கைப்பிடி மருதாணி இலைகளை அரைத்து, அதில் சிறிது தயிர் மற்றும் எலுமிச்சைச் சாறு சேர்த்துக்கொள்ளவும். இதைத் தலைமுடியில் நன்றாகத் தேய்க்கவும். இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். 
10.பின்னர் கூந்தலை அலசி, குளிக்கலாம். இதனால் பொடுகுத் தொல்லை நீங்கும்; நரை முடி பிரச்னைக்கும் தீர்வு கிடைக்கும்.