×

எந்த பழமும் கொடுக்காத சத்துக்களை தரும் இந்த பழம்

 

பழங்களில் அருமையான வடிவமும் ,சுவையும் கொண்ட பழம் எதுவென்றால் அது அன்னாசி பழம்தான் ,மேலும் அதன் வடிவத்தை போன்றே அதில் ஏராளமான நன்மைகளும் அடங்கியுள்ளது .இந்த அப்பழத்தினை ஜூஸாகவோ அல்லது துண்டு துண்டுகளாகவோ சாப்பிட்டால் நம் மூட்டு வலி வராமல் தடுக்கும் ,மேலும் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி கொடுக்கும் .காயங்களை விரைவில் ஆற்றுகின்றது,எலும்புகளின் வலிமையினை அதிகரிக்கின்றது,அதிகமான நார்ச்சத்து,உடல் எடையை குறைக்க உதவும் ,எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு உதவுக்கிறது  .மேலும் இதன் நன்மைகளை பார்க்கலாம்

1.அ சாப்பிட்டால்   உடலில் உள்ள கழிவுகள்,தோலின் உள்ள கழிவுகள் போன்றவற்றை  சிறுநீர் மூலம் வெளியேறி உடல் ஆரோக்கியமாக விளங்கும். .

2.அன்னாசி பழ துண்டுகளை கால் பாதத்தில் வளரும் ஆணிகள் மற்றும் உடலில் தோன்றும் மருக்கள் போன்றவற்றில் வைத்து கட்டினால் நாளடைவில் அது குணமாகும்.

3.அசைவ உணவு சாப்பிடும் போதோ அல்லது விருந்து போன்ற மிதமிஞ்சிய உணவு உண்ட பிறகு அவை உடனடியாக செரிமானமாக ஒரு டம்ளர் அன்னாசி பழ ஜூஸ் குடித்தால் போதும் நல்லா ஜீரணிக்கும்

4.அன்னாச்சி பழத்தில் உள்ள ப்ரோமலின் உணவில் உள்ள சத்துப் பொருட்களை உடனடியாக செரிக்க செய்கிறது.

5.நீண்ட நாள் மலச்சிக்கல் உள்ளவர்கள் உணவிற்குப் பிறகு ஒரு டம்ளர் அன்னாசி பழ ஜூஸ் அல்லது துண்டுகள் சாப்பிட்டு வந்தால் நீண்ட நாள் மலச்சிக்கல் குணமாகி நாள் முழுவதும் புத்துணர்வுடன் இருக்க செய்கிறது