×

ஓம விதையிலிருந்து வரும் புகையை சுவாசித்தால் எந்த நோய் சரியாகும் தெரியுமா ?

 

ஓமம் மனிதனுக்கு பல விதங்களில் பயன்படுகிறது .அதன்  பொதுவான பயன்பாடுகளில் ஒன்று தலைவலியைகுணமாக்குவது ஆகும் . அதை போக்க  ஓமத்தை பொடி செய்து உபயோகித்தால், அது தலை வலியிலிருந்து விரைவாக நிவாரணம் அளிக்கும்

ஈறு மற்றும் பல்வலியுடையவர்களின் பிரச்சினையை தீர்ப்பதில் ஓமம் சிறப்பாக செயல் புரிகிறது  . இந்த பல் வலிக்கு ஓம விதைகளை தீயில் சுட்டு அந்த புகையை சுவாசித்து வந்தால் அதிலிருந்து உடனடி நிவாரணம் உண்டாகும்

ஓமத்தில் உள்ள தைமால் என்ற மூலப்பொருள்  இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது

இருமல் சளி ஆஸ்த்மா உள்ளவர்களுக்கு ஓமம் விதைகளை உட்க்கொள்வதன்  நிவாரணம் பெற முடியும். இது மூச்சுக்குழாய் குழாய்களை விரிவுபடுத்தவும் ,ஆஸ்த்மா நோயாளிகளின் நுரையீரலை பாதுகாக்கிறது

கடுகு எண்ணெயை ஓமம் விதைகளுடன் கலந்து , அட்டையில் தடவி, பின்னர் அதை வீட்டின் மூலைகளில் வைத்தால் கொசு கடியில் இருந்து தப்பித்து,கொசு மூலம் பரவும் மலேரியா ,டெங்கு போன்ற கொடிய நோயிலிருந்தும் தப்பிக்கலாம்