×

இந்த பொடி இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுவதாக சான்றுகள் கூறுகின்றது

 

பொதுவாக நம் நாட்டில் எளிதாக கிடைக்கும் வேப்ப மரத்தின் இலைகள் ,பூ ,மற்றும் காய் போன்றவை பல மருத்துவ பயன்பாட்டிற்கு உதவும் ,இந்த வேப்ப மரத்திலிருந்து கிடைக்கும் வேப்பிலையை பல நோய் தீர்க்க உதவும் என்று ஆயுர் வேதத்தில் கூறப்பட்டுள்ளது .மேலும் இந்த வேப்பம் பொடியின் நண்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம் 
1.எளிமையாக கிடைக்கக்கூடிய விலையில்லா வேப்ப இலை உடலில் பலவித குறைபாடுகள் தீர்வாக அமைகிறது.
2.உடல், சருமம், கூந்தல் அனைத்துக்கும் நன்மை செய்யக்கூடியது  இந்த வேப்பம் பூ 
3..முடி கொட்டும் பிரச்சனைகளுக்கும், வழுக்கை பிரச்சனைகளுக்கும் வேப்பம் பூ சரியான சிகிச்சை அளிக்க கூடியது ஆகும். 
4.வேப்ப பொடியுடன், நீர் சேர்த்து கலவையான பின்பு, அதனை தலையில் தேய்த்துவிட்டு, 30 நிமிடங்களுக்கு பிறகு கழுவினால், முடி வளர்ச்சி பெருகும்.
5.வேப்பம் பொடி என்பது வேப்பம் இலையை சுத்தம் செய்து காம்பு நீக்கிய பிறகு நீரில் அலசி இதை மிக்ஸியில் அரைத்து நன்றாக சலித்து பொடியாக்கி பயன்படுத்த வேண்டும். 
6.இந்த வேப்பம் பொடி  உடல் அழகுக்கு வெளிப்புறத்திலும், பயன் படுத்திடலாம் .
7.இந்த வேப்பம் பொடி இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுவதாக சான்றுகள் கூறுகின்றது. 
8.இந்தப் பொடியில் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள்  அதிக அளவில் உள்ளது.