×

முதிய வயதில் உங்க பேரையே மறக்க செய்யும் இந்த உணவுகளை இப்பவே மறந்துடுங்க 

 

நம்முடைய இயக்கத்துக்கும் சிந்தனைக்கும் நரம்பு மண்டலத்துக்கு அடிப்படையாக இருப்பது மூளை. இந்த மூளை ஆரோக்கியமாக இருக்க  என்னென்ன உணவுகளைச் சாப்பிடக்கூடாது என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.

மூளையின் நலனை பாதுகாக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், ஒருசில உணவுப் பொருட்களை அறவே தவிர்க்க வேண்டும். அந்த பட்டியலில் முதலிடம் பிடிப்பது சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட். இந்த சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் சர்க்கரை மைதா போன்றவைகளை அதிகம் உள்ளது. பொதுவாகவே இது போன்ற உணவு வகைகளை, நம் உணவிலிருந்து தவிர்த்து வருவது மிகவும் நல்லது.

புரோட்டா போன்ற உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும் பலரும் கூறி வருகின்றார்கள். அதில் இருக்கும் மைதா, செயற்கை முறையில் செய்யக்கூடியவை ஆகும்.உடலுக்கு கேடு விளைவிப்பது மட்டுமல்லாமல் கேன்சர் போன்ற நோய்களையும் உண்டாக்கும் என்று குறிப்பிடுகின்றனர்.இந்த சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் கொண்ட உணவுகளை சாப்பிடுவதனால் அஜீரணம் போன்ற பிரச்சினைகளும் ஏற்படும்.

 மருத்துவ ஆய்வு ஒன்றி சில வகை உணவுகளை உட்கொள்வதால் அறிவு மழுங்குகிறது எனவும் மறதி அதிகரிக்கிறது எனவும் தெரிய வந்துள்ளது.

இனிப்பு வகைகள்

இனிப்பு பதார்த்தங்கள், பல வியாதிகளை உடலுக்கு கொண்டு வருகின்றன. மூளை, ஞாபக சக்தி ஆகியவற்றை கெடுக்கிறது. இனிப்பை தொடர்ந்து அதிகமாக எடுத்துக் கொள்பவர்களுக்கு, நரம்பியல் கோளாறுகளும் ஏற்படுகிறது. குழந்தைகளுக்கு கற்பதில் குறைபாடு உண்டாகிறது.

இனிப்பினால் சர்க்கரை நோய் மட்டுமல்ல, மேற்கூறிய வியாதிகள் அனைத்தும் வருகின்றன. பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பண்டங்கள், இனிப்புகள், செயற்கை ஜூஸ் வகைகளையும் தவிர்ப்பது நலம்.

ஜங் உணவுகள்

ஜங் புட்'களை அதிகம் உட்கொள்வதால், மூளையில் வேதியியல் மாற்றம் ஏற்பட்டு மன அழுத்தம், பதட்டம், உடற்பருமன் ஏற்படுகிறது என தெரிய வந்துள்ளது. 

வறுத்த உணவுகள்

வறுத்த உணவு வகைகளில் சுவைக்காக செயற்கை பொருட்கள், ரசாயனம், உணவுக்கு நிறமேற்ற சாயப்பொருட்கள் ஆகியவை சேர்க்கப்படுகின்றன. இதனால் குழந்தைகள், பெரியவர்களுக்கு பழக்க வழக்கத்தில் மாற்றம் ஏற்படுகிறது. மூளையில் உள்ள நரம்பு செல்களை மெதுவாக பாதித்து அழிக்கிறது.

பதப்படுத்தப்பட்ட உணவுகள்

பதப்படுத்தப்பட்ட உணவுகள், ஏற்கனவே சமைக்கப்பட்டு பாக்கெட்டுகளில் அடைக்கப்படுகின்றன. வறுத்த உணவுகளால் ஏற்படும் அனைத்து பாதிப்புகளும் இதிலும் ஏற்படுகின்றன. இந்த வகை உணவுகள் உடலின் நரம்பு மண்டலத்தை பாதிக்கின்றன. இதனால் அல்சீமர்ஸ் போன்ற மறதி நோய்களும் ஏற்பட வாய்ப்புள்ளது.

கொழுப்பு

அறிவை மழுங்கடிக்கும் உணவுகளில் முதன்மையானது கொழுப்புகள். அதிக உடல் எடை மற்றும் இதய நோய்களுக்கு முக்கிய காரணம் கொழுப்பு உணவுகளே. எனவே கொழுப்பு எந்த வடிவத்திலிருந்தாலும் அதை தவிர்க்க வேண்டும். கொழுப்பு, மாரடைப்பு ஏற்பட முக்கிய காரணமாகவும், மூளையை சுருங்கவும் செய்கிறது. உடலுக்கு அனைத்து வகையான தீங்குகளையும் கொண்டு வருகிறது.