×

கிராம்பு பொடியை தேனில் கலந்து சாப்பிட்டால் எந்த பிரச்சினை காணாமல் போகும் தெரியுமா ?

 

பொதுவாக ஆயுர்வேதத்தில் பயன்படுத்தபடும் பொருட்கள் நமது உடல் ஆரோக்கியத்துக்கு பெரும் நன்மைகள் செய்கின்றது .அதன் படி கிராம்புக்குள் ஓராயிரம் நன்மை அடங்கியுள்ளது .கிராம்பை தேனில் கலந்து சாப்பிட்டால் உடலுக்கு நன்மை கிடைக்கும் .மேலும் கிராமில் விட்டமின் சி நிறைந்துள்ளது .இது உடலின் வெள்ளை அணுக்களை அதிகரிக்கும் செரிமான பிரச்சினைகளை போக்க உதவும். செரிமான நொதிகளின் சுரப்பை அதிகரிக்கிறது. மலச்சிக்கல் மற்றும் அஜீரணம் போன்ற செரிமான கோளாறுகளைத் தடுக்கிறது. கிராம்பில் நார்ச்சத்து நிறைந்துள்ளது.மேலும் கல்லீரல் பிரச்சினைகளை இது சரி செய்யும்

கிராம்பு சிறிதளவு எடுத்து நன்றாக பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள்.  இதனை காலை உணவு எடுத்துக் கொண்ட பின் விரல்களால் சிறிதளவு எடுத்து தேனில் கலந்து செய்து சாப்பிட்டு வரலாம்.

அதிக தண்ணீர் குடிக்கவேண்டும். இது வயிற்றிலுள்ள நாற்றத்தை உருவாக்கும் பாக்டீரியாக்களை அழிப்பதில் முக்கியப்பங்கு வகிக்கிறது.

அதிக காரம், அதிக புளிப்பு உள்ள உணவு வகைகளை தவிர்ப்பதால் வாய் துர்நாற்றத்தைத் தவிர்க்கலாம்.

நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். இதனால்செரிமானகோளாறு ஏற்படுவதை தவிர்க்கலாம்.