மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள், காலை வெறும் வயிற்றில் இதை குடிங்க
பொதுவாக நம் உடலுக்கு சுடுநீர் பல நன்மைகளை செய்யும் .இந்த வெந்நீரில் நிறைய ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளது .உதாரணமாக நாம் சுடுநீர் குடித்து வந்தால் அது நம்
தலையில் உள்ள பொடுகையும் கட்டுபடுத்தும். முக்கியமாக, வெந்நீர் பருகுவதால் உடலில் ரத்தஓட்டம் சீராகும்.இது போல வெண்ணீர் மூலம் நாம் அடையும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் நாம் காணலாம்
1.காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சுடு தண்ணீர் குடிப்பதனால் பல நன்மைகள் கிடைக்கின்றன.
2.சிலருக்கு மல சிக்கல் இருக்கும் ,இந்த மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள், காலை வெறும் வயிற்றில் சுடுநீர் குடித்தால் மலம் எளிதாக வெளியேறும். .
3.. வெந்நீரை இரவு தூங்குவதற்கு முன் பருகினால் புளித்த ஏப்பம், வாயுப்பிடிப்பு ஆகியவை நீங்கிவிடும்.
4.சிலருக்கு உடல் எடை அதிகம் இருக்கும் .இப்படி உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் காலையில் வெந்நீர் குடித்தால், உடலிலுள்ள கெட்ட கொழுப்புகள் கரையும்.
5.மேலும் காலை உணவிற்கு முன்னர் சிறிது வென்னீர் குடித்தால் செரிமானம் சிறப்பாக இருக்கும்.
6.சில பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் வயிறு வலி அதிகமாக இருக்கும் .இப்படி இருக்கும் போது, வெறும் வயிற்றில் சுடுநீர் அருந்தினால் வலி சற்று மந்தப்படும்.
7.காலை வெறும் வயிற்றில் சுடுநீரோடு இஞ்சி அல்லது துளசியை கலந்து உண்டால், செரிமானம் மேம்படுவதோடு இளமையான தோற்றம் கிடைக்கும்
8.மேலும் வெந்நீர் பருகுவதால் உடலில் இருந்து வேர்வை அதிகமாக வெளியேறும்.
9.அந்த வியர்வையுடன் சேர்ந்து உடலில் உள்ள நச்சுகளும் வெளியேறி உடல் சுத்தமாகும்.
10.மேலும் வெந்நீர் பருகுவது முடி உதிர்வை குறைத்து முடியின் வளர்ச்சிக்கு உதவி செய்யும்.