முடி வளர்ச்சிக்கு அவசியமாக தேவைப்படும் இந்த சத்து மாவு கஞ்சி
பொதுவாக காலை இட்லி தோசைக்கு பதிலாக கம்பு மாவு, கேழ்வரகு மாவு, வரகு, தினை இப்படிப்பட்ட சிறு தானியங்கள் சேர்க்கப்பட்ட உணவை எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது.அந்த சத்து மாவு கஞ்சி எப்படி தயாரிக்கலாம் என்று இந்த பதிவில் நாம் காணலாம்
1.சத்து மாவு கஞ்சி தயாரிக்க பாதாம் பருப்பு – 4, ஆளி விதைகள் – 1 டேபிள்ஸ்பூன், நெல்லிக்காய் – 1, எடுத்து கொள்வோம்
2.மேற்சொன்ன பொருட்களுடன் பேரிச்சம் பழம் – 2, சிறிய கேரட் – 1. எடுத்து கொள்வோம்
3.சத்து மாவு கஞ்சி தயாரிக்க பாதாம் பருப்பையும், ஆளி விதை களையும் ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு,முந்தைய நாள் இரவே ஊறவைத்துக் கொள்ளவேண்டும்.
4.சத்து மாவு கஞ்சி தயாரிக்க மறுநாள் காலை ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து ஊறவைத்த பாதாம் பருப்புகளையும், ஆளி விதைகளையும் தண்ணீரோடு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்வோம்
5.அதன்பின்பு பேரிச்சம்பழம் நெல்லிக்காயில் உள்ள கொட்டை மட்டும் நீக்கிவிட வேண்டும்.
6.கேரட்டை சிறு சிறு துண்டுகளாக வெட்டி சேர்த்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் விட்டோ அல்லது பால் விட்டோ, இந்த ஜூஸை அரைத்து, வடிகட்ட கூடாது.
7.அப்படியே குடித்து விடவேண்டும். தேவைப்பட்டால் நாட்டு சர்க்கரை அல்லது தேன் சேர்த்து கலந்து இதை குடிப்பது முடி வளர்ச்சிக்கு மிகவும் நல்லது.
8.இந்த ஜூஸில் சேர்க்கப்பட்டிருக்கும் ஆளிவிதையில் ஒமேகா-3 சத்து அதிகமாக உள்ளது.
9.முடி வளர்ச்சிக்கு அவசியமாக தேவைப்படும் இந்த சத்து கொண்ட ஆளி விதைகளை தினமும் மேல் சொன்ன ஜூஸில் தான் கலந்து சாப்பிட வேண்டும் என்ற அவசியம் கிடையாது.