அரிசி சாதம் சாப்பிடுவோருக்கு காத்திருக்கும் அதிர்ச்சி செய்தி என்ன தெரியுமா ?
அரிசியில் மற்ற தானியங்கள் மற்றும் சிறு தானியங்களை காட்டிலும் அதிக அளவில் கலோரிகள் நிறைந்துள்ளது. இதனை நீங்கள் அதிக அளவில் எடுத்துக்கொள்ளும்போது தேவையற்ற கலோரிகள் உடலில் கொழுப்பாக சேர்கின்றது.
இப்படி சேரும் கொழுப்பினால் உங்களுக்கு உடல் எடை அதிகரிக்கும். எனவே அரிசி மூன்று வேலையும் சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள் நண்பர்களே.
அரிசியானது அதிக அளவு கிளைசெமிக் இண்டெக்ஸ் உடையது. மற்றும் இதில் கோதுமை, ராகி, தினை, கம்பு, வரகு போன்ற தானியங்களை காட்டிலும் குறைந்த அளவு நார்சத்து உள்ளது. அதனால் உங்கள் உடலில் மாவுச்சத்தானது அதிக அளவில் சேர்ந்து இரத்த சர்க்கரையின் அளவினை அதிகரிக்கும். இதன் விளைவே சர்க்கரை வியாதி ஆகும்.
அரிசி அனைவரும் தினமும் உண்ணும் ஒரு பொதுவான உணவாகும். ஆனால் அரிசியில் உடலுக்குத் தேவையான சத்துக்கள் எதுவும் இல்லை.
தினமும் சாதம் சாப்பிடுவது ஒரு சில பக்கவிளைவுகளை ஏற்படுத்துகின்றது. தற்போது அவை என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
தினமும் சாதம் சாப்பிடுபவரா? அதிகம் சாப்பிட்டால் இந்த ஆபத்தை ஏற்படுத்துமாம்!
அதிக அரிசி சாப்பிடுவது மாரடைப்பு அபாயத்துடன் தொடர்புடையது. ஆகையால் வெள்ளை அரிசியை அதிகமாக உட்கொள்வதைக் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும். இல்லையேல் அதன் மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
மெட்டபாலிக் சிண்ட்ரோம் பிரச்சனை வெள்ளை சாதம் சாப்பிடுவதாலும் ஏற்படும். எனவே மாதம் ஒருமுறை மட்டும் வெள்ளை அரிசியை சாப்பிட முயற்சி செய்யுங்கள்.
நீங்கள் உடல் பருமனால் பிரச்சனைக்கு ஆளாகி இருந்தால், வெள்ளை சாதம் சாப்பிடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். ஏனெனில் அது உடல் எடையை அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளது. எனவே இவற்றை தவிரப்பது நல்லது.