×

சீரகத்துடன் கற்கண்டை கலந்து  தின்றால் உடலில் நடக்கும் அதிசயம் என்ன தெரியுமா ?

 

எந்நேரமும் தொண்டை புகைச்சல் வந்து இருமல் இருக்கும் நபர்கள் ஜீரகத்துடன் கற்கண்டை கலந்து மென்று தின்றால் அந்த இருமல் வந்த சுவடு தெரியாமல் மறைந்து போகும்

ஜீரகப்பொடியுடன் தேன் கலந்து சாப்பிடும் பொழுது தீராத விக்கல் உடனடியாக நின்று நல்ல பலன் கிடைக்கும்

மூலம் இருப்பவர்கள் ஜீரகத்தை மூல முலையில் பூசினால் மூலம் சரியாகி சிறந்த நிவாரணம் கிடைக்கும்

சிலருக்கு உடலில் அரிப்பு ஏற்பட்டுக்கொண்டே இருக்கும் அப்படிப்பட்டவர்கள் ஜீரகத்தை அரைத்து உடலில் பூசி வர உடலில் ஏற்படும் அரிப்பு நின்று ஆரோக்கியம் மேம்படும்

அளவுக்கதிகமாக சாப்பிட்டு செரிமான பிரச்னை வயிற்றுவலி இருப்பவர்கள் ஜீரகத்தை மென்று தின்று வர வயிற்றுவலி நீங்கி செரிமானம் நன்றாக ஏற்பட்டு உடல் ஆரோக்கியம் மேம்படும் .

பித்தம் அதிகம் இருப்பவர்கள் ஜீரகப்பொடியுடன் எலுமிச்சை சாற்றை சேர்த்து கலந்து நன்றாக குழைத்து சாப்பிட்டு வர பித்தம் அகலும். அதுபோல் நல்லெண்ணெய்யில் ஜீரகத்தை போட்டு காய்ச்சி அந்த எண்ணையை தேய்த்து குளித்தாலும் பித்தம் நீங்கும்

ரத்தமூலம் இருப்பவர்கள் ஜீரகத்தை வாழைப்பழத்துடன் பிசைந்து காலையில் வெறும்வயிற்றில் பிசைந்து சாப்பிட்டு வர ரத்த மூலம் விரைவில் குணமாகும்.

தீராத வயிற்றுவலி இருப்பவர்கள் ஜீரகத்துடன் சேர்த்து உப்பையும் கலந்து மென்று தின்று தண்ணீர் குடித்து வர வயிற்றுவலி உடனே தீர்ந்து உடல் ஆரோக்கியம் சீராகும் என்று சித்த மருத்துவம் கூறுகிறது