முகம் பளபளப்பாக இருக்க சில இயற்கை வழிகள்
பொதுவாக முகம் பளபளப்பாக இருக்க இன்றைய நவீன பெண்கள் பல்வேறு அழகு நிலையம் சென்று அதற்கு பல ஆயிரங்களை செலவு செய்து வருகின்றனர் .ஆனால் சில இயற்கை முறைகளை கையாண்டால் செலவே இல்லாமல் நம்மை அழகு படுத்தி கொண்டு ,முக அழகை பராமரிக்கலாம் .இது பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம்
1.திராட்சைப் பழத்தை சிறிதளவு எடுத்து முகத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவினால் முகம் பளபளப்பாக இருக்கும்.
2.தக்காளியை முகத்தில் நன்கு தேய்த்து ஒரு மணிநேரம் கழித்து கழுவினால் முகம் பொலிவு பெறும்.
3.ஆப்பிள் பழத்தை தோல் நீக்கி அரைத்து அதனுடன் தேன் கலந்து முகத்தில் தடவி நன்கு ஊறிய பிறகு குளித்தால் முகச் சுருக்கம், ஏற்படாது
4.அது மட்டுமல்லாமல் மேற்கூரிய ஆப்பிள் தோல் மற்றும் தேன் மூலம் பருக்கள் போன்றவை ஏற்படாது. மேலும் முகம் பொலிவு பெறும்.
5.மேலும் புதினா, கொத்தமல்லி அல்லது கருவேப்பிலை இவற்றுள் ஏதாவது ஒன்றை துவையல் செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் சோம்பல் ஏற்படாமல் இருக்கும்.
6.பிழிந்த எலுமிச்சம் பழத்தோலை மோர் அல்லது தயிருடன் சேர்த்து முகத்தில் நன்கு தேய்த்துக் கழுவினால் முகம் பளபளப்பாக இருக்கும்.
7.பெண்களுக்கு உதட்டின் மேல் மற்றும் கீழ் தாடைகளில் வளரும் முடிகளை அகற்ற சிறிதளவு மஞ்சள் மற்றும் உப்பை நீரில் கலந்து முடிகளின் மேல் மெதுவாக தேய்க்க வேண்டும்.
8.இவ்வாறு செய்தால் முடி நாளடைவில் உதிர்ந்துவிடும். மேலும் அந்த இடத்தில் முடி முளைக்காது