இலவங்கப்பட்டை மற்றும் தேன் கலந்த பானத்தால் உங்கள் உடலில் நடக்கும் அதிசயம்
இன்றைக்கு மாறி வரும் ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கத்தால் நம் உடலில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது இந்த குப்பை குவியல்களை அவ்வப்போது இயற்கை முறையில் வெளியற்றாவிட்டால் நம் உடல் நோய்களின் கூடாரமாக மாறிவிடும் .இப்படி உடலை இயற்கை முறையில் க்ளீன் பண்ண சில வழிகள்
சில பானங்களை வெறும் வயிற்றில் காலையில் குடித்தால் உடலில் தங்கியுள்ள அழுக்குகளையும், நச்சுக்களையும் எளிதாக அடிச்சி விரட்டலாம் .
புதினா மற்றும் வெள்ளரிக்காய் தரும் நன்மைகள் :
புதினா மற்றும் வெள்ளரிக்காய் பானம் உங்கள் உடலில் சேரும் அழுக்குகளையும் சுத்தம் செய்கிறது.
மறுபுறம் புதினா இலைகளில் பல வகையான பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளதால் நம் உடலில் நோய்களை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழித்து விடும் .வெள்ளரியில் நிறைய நீர் சத்துக்கள் நிறைந்துள்ளது
இலவங்கப்பட்டை மற்றும் தேன் பானம் உடலில் உள்ள அழுக்குகளையும், நச்சுக்களையும், சுத்தம் செய்து ,மனிதனின் உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி அள்ளி வழங்குகிறது
சீரகத் தண்ணீர் பயன்கள்
சீரகம் நம் உடலுக்கு செய்யும் நன்மைகளை சொல்லி மாளாது .அவ்ளோ சிறப்புகள் அதில் அடங்கியுள்ளது
அதனால் தினம் காலையில் வெறும் வயிற்றில் சூடான நீரில் சீரகத்தை சிறிதளவு கலந்து அதனுடன் இஞ்சி சேர்த்து குடித்து வாருங்கள் .இதனால் மனிதனின் அடிவயிற்றில் தேங்கி இருக்கும் கெட்ட கொழுப்புகள் வெளியேறி எடை குறைப்புக்கும் வழி கிடைக்கும்