நினைவாற்றலை பெருக்கும் திறன் கொண்டது இந்த கீரை .
பொதுவாக வல்லாரை கீரை நம் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொடுக்க கூடியது .இந்த வல்லாரை கீரையை எப்படி பயன் படுத்தினால் என்ன நன்மைகள் நம் உடலுக்கு கிடைக்கும் என்று இந்த பதிவில் நாம் காணலாம்
1.வல்லாரை நினைவாற்றலை பெருக்கும் திறன் கொண்டது ஆகும்
2.வல்லாரை மூலம் அல்சைமர் நோய் வருவதைத் தடுப்பதற்கும் மூளையிலுள்ள நரம்புகள் தூண்டுவதன் மூலம் அல்சைமர் நோய் நோயாளிகளிடம் மருந்து நல்ல மாற்றங்களை கொடுப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
3.வல்லாரையை சாப்பிட பிடிக்காதவர்கள் தினம் இரண்டு வேளை தேநீராக சாப்பிடலாம்
4.சரியான அளவில் தூக்கமின்மை ஒழுங்கற்ற உணவுமுறை போன்றவற்றால் வயிற்றின் உட்புறச் சுவர்களைத் உருவாகும் அல்சர் புண்களை சரிசெய்யும்
5. வல்லாரையில் உள்ள மூலக்கூறுகள் கூட்டாகவோ பொரியலாகவோ சாப்பிடுவதை விட வெறும் சாறு அல்லது தேனீர் சாப்பிடும்போது போது அதிக பலன் கிடைப்பதாக இருக்கும்
6.வல்லாரையில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் பண்பு இருப்பதால் வெரிகோஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்ல பலன்கள் தருகிறது
7.வெரிகோஸ் நோயால் வரும் நரம்பு வீக்கம் வலி கால் வீக்கம் போன்றவற்றை குறைக்கும். வல்லாரை இலையை பச்சையாகவோ அல்லது காய வைத்து பொடி செய்து பயன்படுத்தலாம்
8.வல்லாரையை பச்சையாக பயன்படுத்தும்போது முழுக்கத் தண்ணீரை சேர்த்து கொதிக்க வைக்கவும்
9. வல்லாரையை மிதமான சூட்டில் கொதித்தவுடன் இறக்கி அரை டீஸ்பூன் தேன் சேர்த்து பருகவும் காயவைத்து பொடியாக்கி வல்லாரையை ஒன்று அல்லது இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்து ஒரு கப் கொதிக்கும் நீரில் சேர்த்து நிமிடங்கள் கழித்து இறக்கவும்
10.இந்த வல்லாரையை தேவைக்கேற்ற பால் சர்க்கரை அல்லது தேன் கலந்து பருகலாம்.