×

எலும்புவளர்ச்சிக்கு உதவுகிறது இந்த தேயிலை

 

பொதுவாக பச்சை தேயிலை தேநீரில் பதுங்கியிருக்கும் ஆரோக்கிய ரகசியம் பற்றி நாம் இப்பதிவில் காணலாம் 

1.இதில் உள்ள ஏன்டிஆக்ஸிடன்ட் வாய், இரைப்பை, கணையம், நுரையீரல், குடல், தொண்டை மற்றும் மார்பு புற்று நோயிலிருந்து பாதுகப்பளிக்கின்றது.

2.ஹார்வேர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியின்படி தேநீர் அருந்துபவர்கள் தேநீர் அருந்தாதவர்களை விட 40 சதம் வீதம் குறைவாகவே ‘மாரடைப்பு நோயால்'(Heart Attack) பாதிக்கப்படுகின்றனர்.

3.பற்சிதைவை ஏற்படுத்தும் பாக்டீரியாவை கட்டுப்படுத்த இதில் இயற்கையாக உள்ள ஃபுளோரைடு பயன்படுகிறது.

4.எலும்புவளர்ச்சிக்கு அவசியமான மேங்கனீஸும் இருதய துடிப்பை கட்டுப்படுத்தும் போட்டாஷியமும் இதில் அபரிதமாக உள்ளது.

5.பச்சைத் தேயிலையில் பி1,பி2,பி6, ஃபோளிக் அமிலம் மற்றும் கால்சியம் (B1,B2,B3,Folic Acid and Calcium) போன்றனவும் அடங்கியுள்ளன.
6.பச்சைத் தேயிலை புற்றுநோயிலிருந்து பாதுகாப்பு,
குளோஸ்ட்ரால் என்ற கொழுப்பின் அளவைப் பாதுகாத்தல்,
இதய துடிப்பை பாதுகாத்தல்,
இரத்தத்தில் சர்க்கரையின் அளவு திடீரென உயர்வதை கட்டுபடுத்துதல்,
உணவை கேடுபண்ணும் பாக்டீரியாவிலிருந்து பாதுகாப்பு,
அலர்ஜியிலிருந்து (ஒவ்வாமை) பாதுகாப்பு தருகிறது