×

சளி காய்ச்சலுக்கு  சிறந்த மருந்தாக இந்த தேனில் ஊறவைத்த பொருள் பயன்படும் 

 

பொதுவாக  பூண்டு நம் உடலில் உண்டாகும் வாயு கோளாறுகளை குணப்படுத்த உதவும் ,மேலும் கொலஸ்ட்ரால் அதிகமாகாமல் பூண்டு காக்கும் .மேலும் இந்த பூண்டை தேனில் ஊற வைத்து சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் 

1.தேனில் ஊறவைத்த பூண்டு உண்பதால் சளி, காய்ச்சல், இருமல், நோய் கிருமி தொற்று போன்றவை ஏற்படாது ., 
2.சளி காய்ச்சலுக்கு  சிறந்த மருந்தாகவும் இந்த தேனில் ஊறவைத்த பூண்டு பயனளிக்கிறது.
3..தினமும் காலை வெறும் வயிற்றில் அரை டீஸ்பூன் அளவு உட்கொண்டால் போதுமானது. 
4..ஒரு நாளுக்கு ஐந்தில் இருந்து ஆறுமுறை தேனில் ஊறவைத்த பூண்டு அரை டீஸ்பூன் அளவில் உட்கொள்ளலாம்.
5.உணவு உண்ட பிறகு இதை உட்கொள்வது, இதன் செயலாற்றலை குறைத்துவிடும். எனவே தான் காலையில் எழுந்ததும் உட்கொள்ள கூறப்படுகிறது.
6.பிறகு நற்பகல், மாலை வேளையிலும் கூட தேனில் ஊறவைத்த பூண்டு உட்கொள்ளலாம்.
7.உடல் எடை அதிகரிக்க, குறைக்க என இரண்டிற்கும் பயன் தரும் தன்மை கொண்டுள்ளது தேன். 
8.உடல் எடை குறைக்க தண்ணீரிலும், உடல் எடை அதிகரிக்க பாலிலும் தேனை கலந்து பருகலாம்.
9.நல்ல மருத்துவ குணம் வாய்ந்த இந்த இரண்டையும், சேர்த்து உட்கொள்வதால், உடலில் நோய் எதிர்ப்பு அதிகரிக்கும்