எப்போதும் இளமையாய் மஞ்சளை எப்படி யூஸ் பண்ணனும் தெரியுமா ?
பொதுவாக நம் முகத்திற்கு மஞ்சள் பொலிவையும் ,அழகையும் தர கூடியது .அதனால்தான் இன்னும் கிராமத்து பெண்கள் மஞ்சள் பூசி குளிக்கின்றனர் .அந்த காலத்திலும் பெண்கள் மஞ்சள் பூசி குளித்தனர் ஆனால் இந்த காலத்தில் இதையெல்லாம் விட்டு விட்டு க்ரீம் பூசி பல பக்க விளைவுக்கு ஆளாகின்றனர்
நம் முன்னோர்கள் மஞ்சளை அன்றாடம் பயன்படுத்தியதால், இளமையான தோற்றத்தில் காணப்பட்டார்கள்.மேலும் மஞ்சள் மூலம் நாம் எப்படி பயனடையலாம் என்று இந்த பதிவில் நாம் பார்க்கலாம்
1.மஞ்சளைக் கொண்டு ஒருவர் அடிக்கடி வீட்டிலேயே ஃபேஸ் பேக் போட்டு வந்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் நல்ல பொலிவை தரும்
2.மற்றும் மஞ்சளில் உள்ள ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-வைரல், அழற்சி எதிர்ப்பு போன்ற மருத்துவ பண்புகளால் சருமத்தின் அழகு மேலும் கூடிவிடும் .
3.மஞ்சளை எப்படி பயன் படுத்த வேண்டுமென்றால் ஒரு பௌலில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், 1/2 டீஸ்பூன் கடலை மாவு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்கு பேஸ்ட் செய்து கொள்ளவேண்டும்.
4.பின் அந்த கலவையை முகத்தில் தடவி 15 நிமிடம் நன்கு ஊறவைக்கவேண்டும்.
5.பின்பு நீரால் முகத்தைக் கழுவ,. இறுதியில் நேச்சுரல் ஸ்கின் டோனரான ரோஸ் வாட்டர் கொண்டு முகத்தைத் துடைக்க முகம் பளிச்சென்று இருக்கும் .
6.அடுத்து மஞ்சள் மூலம் முக பொலிவு பெற ,ஒரு சிறிய பௌலில் 1 சிட்டிகை மஞ்சள் தூள், 2-3 துளிகள் லாவெண்டர் ஆயில் மற்றும் 2 டீஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
7.பின் அந்த ஃபேஸ் பேக் கலவையை முகத்தில் தடவி 10 நிமிடம் நன்கு காய வைக்கவேண்டும்.
8.இறுதியில் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ முகம் பளிச்சென்று இருக்கும்
9.அடுத்து ஒரு பௌலில் 1 டீஸ்பூன் தேனில் 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
10.பின்பு அதனை முகத்தில் தடவி 10 நிமிடம் நன்கு காயவைக்கவேண்டும். பின் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ ,நல்ல பலன் கிடைக்கும்.