தினந்தோறும் பாதாம் பருப்பு உட்கொண்டு வருபவர்களுக்கு எந்த நோயெல்லாம் தாக்காது தெரியுமா ?
பொதுவாக பாதாம் பருப்பு நம் உடலுக்கு பல்வேறு நோய்கள் வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது .
உதாரணமாக பாதாம் இரத்தத்தில் சீனி மற்றும் இன்சுலின் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதால் நீரிழிவு நோயிலிருந்து பாதுகாப்பு கிடைக்கிறது. மேலும் சீனி சேர்க்கப்படாத பாதாம் பால் எடையைக் குறைக்க உதவுகிறது. உடல் பருமன் உடையவர்கள் பாதாமின் துணை கொண்டு எடையைக் குறைக்க முயற்சி செய்யலாம்.இவ்ளோ நன்மைகள் கொண்ட பாதாமில் நாம் அடையும் மற்ற பலன்கள் பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்
1.பாதாமில் உள்ள நல்ல கொழுப்பு, புரதம் மற்றும் பொட்டேஸியம் இருதய நோய் வரும் ஆபத்துக்களைக் குறைக்கிறது.
2.மேலும் பாதாமில் உள்ள போலிக் அமிலம் தமனிகளில் கொழுப்பு படிவதைத் தடுத்து நிறுத்துகிறது.
3.25 கிராம் பாதாமில் ஒரு நாளைக்குத் தேவையான 70% வைட்டமின் ஈ உள்ளதால் நம் ஆரோக்கியம் காக்கும் .
4.மேலும் மற்ற பருப்புகளை விட பாதாமில் கால்சியம் நிரம்ப இருப்பதால் நம் உடல் நலம் காக்கும் .
5.பாதாமில் புற்றுநோயை எதிர்க்கும் வைட்டமின் பி 17 என்ற சத்தும் இதில் உள்ளது.
6.பாதாம் சாப்பிட்டால் மலச்சிக்கல், சுவாசக் கோளாறுகள், இருமல், இருதயக் கோளாறுகள், நீரிழிவு நோய், சருமக் கோளாறுகள்வராமல் தடுக்கும் ,
7.பாதாம் சாப்பிட்டால் கேச பிரச்சனைகள், சொரைஸிஸ், பல் பாதுகாப்பு, இரத்த சோகை, ஆண்மைக் குறைவு, பித்தப்பை கல் போன்ற பிரச்னைகளைக் களைவதில் பாதாம் பருப்பு துணை புரிகிறது.
8.தினந்தோறும் பாதாம் பருப்பு உட்கொண்டு வருபவர்களுக்கு உடலில் நல்ல கொழுப்பு கூடி கெட்ட கொழுப்பு குறைகிறது.
9.பாதாம் இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது. பாதாமில் உள்ள பொட்டஸியம் இரத்த அழுத்தத்தைச் சீராக வைத்திருக்க உதவுகிறது.
10.பாதாமில் உள்ள சத்துக்கள் மூளை வளர்ச்சிக்கு உதவுகின்றன. மூளைத் திறனை மேம்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கிறது.
11.பாதாமில் உள்ள நார்ப்பொருள் மலச்சிக்கலைத் தடுக்க உதவுகிறது.