கொய்யா இலை நீரால் தினமும் முகத்தைக் கழுவ எந்த நோய் ஓடும் தெரியுமா ?
பொதுவாக டீன் ஏஜ் வயதில் இருக்கும் பிள்ளைகளுக்கு முகப்பரு மிக பெரிய தொல்லைகளை கொடுக்கும் .சிலர் அந்த முகப்பருவை கிள்ளி விடுவர் .இதனால் அந்த பருக்கள் நிறைய பெருகி முகமே அசிங்கமாய் மாறி விடும் வாய்ப்புள்ளது .இந்த முகப்பருவுக்கு இயற்கையில் என்னென்ன நிவாரணம் கொடுக்கலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்
1.லெமன் கிராஸ் என்னும் எலுமிச்சை புல்லில் சக்தி வாய்ந்த ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் உள்ளன.
2. லெமன் கிராஸ் எண்ணெயில் உள்ள உட்பொருள், சருமத்தை சுத்தம் செய்வதோடு மட்டுமின்றி, சரும தொற்றுக்களைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது
3.அடுத்து பருக்களை அழிக்க வேப்பிலை ஒரு பாரம்பரிய நிவாரணப் பொருள்.
4. முகப்பருக்களைப் போக்க வேப்பிலையை அரைத்து பேஸ்ட் செய்து பருக்களின் மீது தடவலாம்
5. முகப்பருக்களைப் போக்க வேப்பிலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்நீரைக் கொண்டு முகத்தைத் துடைத்து எடுக்கலாம்.
6.அடுத்து கொய்யா இலை முகத்தில் உள்ள பிம்பிளின் தோற்றத்தைக் குறைப்பதோடு மட்டுமின்றி, பருக்களைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது .
7.முகப்பருக்களைப் போக்க கொய்யா இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்நீரால் தினமும் முகத்தைக் கழுவ வேண்டும்.
8. அடுத்து முகப்பருக்களைப் போக்க சிறிது வெந்தய கீரை அல்லது வெந்தய விதைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்நீரை தினமும் ஒரு வாரத்திற்கு முகத்தில் தடவி வந்தால், முகத்தில் உள்ள பருக்கள் ஓடியே போய் விடும் .
9. அடுத்து புதினா இலை சருமத்தை சுத்தம் செய்வது மட்டுமின்றி, பிம்பிளைத் தடுக்க உதவும் ஆற்றல் கொண்டது
10.முகப்பருக்களைப் போக்க புதினா இலைகளை அரைத்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி நன்கு காய்ந்ததும், நீரால் நன்கு கழுவி வந்தால், பருக்கள் இருக்கின்ற இடம் தெரியாமல் போகும்.