கறிவேப்பிலை பொடியை தேன் கலந்து உட்கொண்டு வந்தால் எந்த நோய் குணமாகும் தெரியுமா ?
பொதுவாக நாம் கொசுறாக காய் காய்க்கடையில் வாங்கும் கறிவேப்பிலையில் நிறைய நன்மைகள் உண்டு .இந்த இலையை நாம் அடிக்கடி உண்டு வந்தால் நம் உடலில் பல்வேறு நோய்கள் வெளியேறி நம் ஆரோக்கியம் சிறக்கும் .இது பற்றி இந்த பதிவில் நாம் காணலாம்
1. வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலை இலையை உட்கொண்டு வந்தால், வயிற்றைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் கரைந்துவிடும்
2.சிலருக்கு இரத்த சோகை இருக்கும் .இப்படி உள்ளவர்கள், காலையில் ஒரு பேரிச்சம் பழத்துடன், சிறிது கறிவேப்பிலையை உட்கொண்டு வந்தால், உடலில் இரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து, இரத்த சோகை நீங்கி ஆரோக்கியம் பிறக்கும் .
3.சிலர் சர்க்கரை நோயினால் பாதித்திருப்பர் .இப்படி பாதிக்கப்பட்டவர்கள், தினமும் காலையில் கறிவேப்பிலையை பச்சையாக உட்கொண்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.
4.மேலும் கறிவேப்பிலை உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புக்களை கரைப்பதோடு, நல்ல கொழுப்புக்களை அதிகரித்து, நம் ஆரோக்கியம் காக்கும்
5.மேலும் கறிவேப்பிலை உண்பதால் இதய நோய் மற்றும் பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்சனையில் இருந்து நல்ல பாதுகாப்பு தரும்.
6.நீண்ட நாட்கள் செரிமான பிரச்சனையை சந்தித்து வருபவராயின், அதிகாலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டால்,நல்ல பலன் கிடைக்கும்
7.மேலும் கறிவேப்பிலை உண்பதால் செரிமான பிரச்சனைகள் நீங்கிவிடும்.
8.கறிவேப்பிலையை தினமும் சிறிது உட்கொண்டு வந்தால், முடியின் வளர்ச்சியில் நல்ல மாற்றத்தைக் காணலாம் ,
9.மேலும் கறிவேப்பிலை உண்பதால் முடி நன்கு கருமையாகவும் இருப்பதை உணர்வீர்கள்.
10.சிலருக்கு சளி இருக்கும் .இதற்கு , ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை பொடியை தேன் கலந்து தினமும் இரண்டு வேளை உட்கொண்டு வந்தால், உடலில் தேங்கியிருந்த சளி முறிந்து வெளியேறிவிடும்