×

இந்த தண்ணீர் மூலம் கூந்தலுக்கு போஷாக்கும், பொலிவும் கிடைக்கும்

 

பொதுவாக நாம் சாதம் வடிக்க பயன் படுத்தும் அரிசி கழுவிய நீரில் பல்வேறு நன்மைகள் அடங்கியுள்ளன .அதனால் இந்த அரிசி தண்ணீரில் நம் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்த பதிவில் நாம் காணலாம் 

1.முதலில் அரிசி கழுவிய நீரை வடித்து 2 மணி நேரம் வைத்திருந்தால் தண்ணீர் மேலாக வடிந்திருக்கும். அதை ஒரு போத்தலில் தனியாக வைத்துக்கொள்ள வேண்டும். 
2.இந்த அரிசி கழுவிய நீரில் இருக்கும் சத்துகள் சருமத்தின் மூன்று அடுக்குகளில் சென்று சருமத்தை சுத்தம் செய்து, சருமத்தை தளர செய்யாமல் அதை இறுக்கமாக வைத்திருக்கும். 
3.இந்த அரிசி தண்ணீரின் காரணமாக  சருமம் மென்மையாகவும் மிருதுவாகவும் இருக்கும்.  
4.இந்த அரிசி தண்ணீரை   ஊறவைத்து குறைந்தது 7 மணி நேரமாவது ஊற வையுங்கள். 
5.தலைக்கு ஷாம்பு அல்லது சீயக்காய் பயன்படுத்திய பின்பு இந்த நீரை தலை முழுவதும் தடவி 10 நிமிடங்கள் ஊறவிட்டு சுத்தமான நீரில் கழுவ வேண்டும். . 
6.இந்த அரிசி தண்ணீரில் கூந்தலுக்கு போஷாக்கும், பொலிவும் கிடைக்கும். முடி உதிர்வு, நுனி வெடிப்பு, வறட்சி போன்ற பிரச்சனைகளும் வராமல் தவிர்க்கலாம்.
7.இந்த அரிசி தண்ணீரில் பல வகையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்திருக்கின்றன. குறிப்பாக, அமினோ அமிலங்கள்,பி வைட்டமின்கள் ஆகியவை அதிக அளவில் நிறைந்திருக்கின்றன. 
அமினோ அமிலங்கள்
8.இந்த அரிசி தண்ணீரில் வைட்டமின் ஈ அதிக அளவில் நிறைந்திருக்கின்றன. 
9.இந்த அரிசி தண்ணீரில் கனிமங்கள்  அதிக அளவில் நிறைந்திருக்கின்றன. 
10.இந்த அரிசி தண்ணீரில் ஆக்ஸிஜனேற்றிகள் அதிக அளவில் நிறைந்திருக்கின்றன.