×

ஒரு துண்டு இஞ்சியை அரைத்து ஒரு டம்ளர் மோரில் கரைத்துக் குடிக்க நடக்கும் அதிசயம்  

 

பொதுவாக இஞ்சி நம் உடலுக்கு நிறைய நன்மைகளை கொடுக்கும் .அதனால் இஞ்சியை சுத்தம் செய்யும்போது அதன் மேல் தோலை நன்றாக நீக்க வேண்டும் . அதே போல் சுக்கை சுத்தம் செய்யும்போது அதன் மேல் சுண்ணாம்பை தடவி காயவைத்து அதன் தோலை நன்கு சீவி எடுக்கவேண்டும்.இந்த ப்பதிவில் இஞ்சி மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து நாம் பார்க்கலாம் 

1.தினம் ஒரு துண்டு இஞ்சியை அரைத்து ஒரு டம்ளர் மோரில் கரைத்துக் குடிக்கலாம் .இதனால்  இடுப்புப் பகுதியில் கொழுப்பு சேராமல் பார்த்துக்கொள்ளும். 
2.மேலும் இஞ்சி சாப்பிட்டால்  இதய ரத்தக்குழாய்கள் எதிலும் அடைப்பு உண்டாகாமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது , 
3.இஞ்சியையும், சுக்கையும் தோல் நீக்கி பயன்படுத்தவில்லை எனில்  வயற்றுக் கடுப்பு முதலியவை ஏற்படும்.
4.இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும். ஆக மூன்று தோஷத்தையும் நீக்கும் ஆற்றல் இஞ்சிக்கு உண்டு. 
5.காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும்.
6.இஞ்சி சாறோடு, தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வெந்நீர் குடித்துவர தொப்பை  கரைந்து விடும்.
7.இஞ்சி சாறில், தேன் கலந்து தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர நோய் எதிர்ப்பு சக்தி கூடும். 8.இஞ்சியில் தேன் சேர்த்து சாப்பிட உற்சாகம் ஏற்படும். இளமை பெருகும். 
9.இஞ்சி சாறுடன், வெங்காய சாறு கலந்து ஒரு வாரம், காலையில் ஒரு கரண்டி வீதம் குடித்துவர நீரிழிவு குறையும்