×

தொப்புளில் நெய் தடவினால் உடலுறுப்புகளில்  ஏற்படும் அதிசய மாற்றம்

 

நாம் உணவில் சேர்த்து கொள்ளும் நெய் ,ஆயுர்வேதத்தில் மருந்தாக பயன்படுகிறது .

 மூட்டு வலிக்கு ஆயுர்வேதம் வழங்கும் தீர்வுகளில்,  நெய் பயன்படுத்தப்படுகிறது. தொப்புளில் நெய் தடவுவது,மூட்டு வலியை வீட்டுக்கு அனுப்பும் .மேலும் நெய் கிடைக்கவில்லையன்றால்  தொப்புளில் எண்ணெயாவது  தடவிப் பாருங்கள், கண்டிப்பாக மூட்டு வலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைத்து ,நன்றாக நடக்க முடியும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது

மலச்சிக்கல் பிரச்சனை இன்றைக்கு நாட்டில் பல பேருக்கு .இருக்கிறது .இதற்கு சிறந்த தீர்வாக தொப்புளில் நெய் தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும் .நெய் தடவுவதால் மலமிளக்கியாக செயல்ப்பட்டு பலன் கிடைக்கும்

முகத்தில் முகப்பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் இருப்போர்க்கு இந்த நெய் வைத்தியம் பலன் கொடுக்கும் தொப்புளில் நெய்யை மசாஜ் செய்வது சருமத்தை புத்துணர்ச்சியடையச் செய்து, புதிய பொலிவைக் கொடுக்கும். இரவு நேரங்களில் தவறாமல் நெய்யை தொப்புளில் பயன்படுத்துவது, உங்கள் சருமத்தை மிக நீண்ட நேரத்திற்கு ஈரப்பதமாக வைத்திருக்கும்,

 மாதவிடாய் வலிக்காக வலிநிவாரணி மாத்திரைகளைப் போட்டு பக்க விளைவு ஏற்படுத்தி கொள்வதை விட  தொப்புளில் நெய்யை மசாஜ் செய்வது நல்ல  பலன் கொடுக்கும் என்று ஆயுர்வேத மருத்துவர்கள் கூறுகின்றனர்