×

தினமும் பத்து உலர் திராட்சை பழத்தை சாப்பிட்டு வந்தால் என்ன நன்மை தெரியுமா ?

 

பொதுவாக உலர் திராட்சையில் நம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் சத்துக்கள் நிறைய அடங்கியுள்ளது .இந்த உலர் திராட்சையை ஊற வைத்து உண்பதால் நம் உடலுக்கு நிறைய நன்மைகள் உண்டாகும் ,அந்த நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம் 

1.உலர் திராட்சை  தோல் சுருக்கம், முதுமை தோற்றம் போன்றவற்றை நீக்கி இளமையை தக்க வைத்து கொள்கிறது.
2.உடல் சூட்டினால் கஷ்டப்படுபவர்கள், ஒரு லிட்டர் நீரில் 15-20 உலர் திராட்சை சேர்த்து அந்த தண்ணீரை கொதிக்க வைத்து, பின் குளிர வைக்கவேண்டும். 
3.இந்த நீரை நாள் முழுவதும் குடித்து, திராட்சையை உட்கொண்டு வந்தால், விரைவில் உடல் வெப்பம் தணியும்.
4.பொதுவாக மாதவிடாய் காலத்தில் சில பெண்கள் வயிற்று வலி மற்றும் அதிகப்படியான இரத்தப்போக்கினால் கஷ்டப்படுவார்கள். 
5.அப்படிப்பட்டவர்கள் ஊறவைத்த உலர் திராட்சையை தினமும் சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் பிரச்சினை மறைந்து விடும் .
6.மேலும் ஆரோக்கியமான உலர் திராட்சையில் விட்டமின் ஏ இருப்பதால், கண்களுக்கு நல்ல பலன்களை தரும். 
7.மட்டுமல்லாது கண்ணாடி அணிந்திருப்பவர்கள் தொடர்ந்து இந்த உலர் திராட்சை சாப்பிட்டுவந்தால், பார்வை குறைபாடு நீங்கி, பார்வை திறன் மேம்படும்.
8.உலர் திராட்சையுடன் மிளகு சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டால் நாவறட்சி எளிதில் குணமாகும். 9.தினமும் பத்து உலர் திராட்சை பழத்தை தொடர்ந்து மூன்று மாதம் சாப்பிட்டு வந்தால்  பல மாற்றங்கள் தெரியும்.
10.மேலும் இந்த உலர் திராட்சையில்  சுக்ரோஸ், ப்ரெக்டொஸ், வைட்டமின் ஏ, பி1, பி2, பி3, பி6, பி12 அமினோ அமிலம், இரும்புசத்து பொட்டாசியம், கால்சியம் போன்ற அனைத்து சத்துக்களும் இதில் உள்ளது