ரத்தச் சர்க்கரையளவு கட்டுக்குள் வைக்க உதவுகிறது இந்த ஃப்ளவர்
பொதுவாக காய்கறி மற்றும் பழங்களை சாப்பிடுவதினால் உங்களது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். காய்கறி மற்றும் பழங்களில் உள்ள ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் மற்றும் ஆண்ட்டி இன்ஃபலமேட்டரி துகள்களினால் உங்களது உடலின் மெட்டபாலிசம் மிகவும் வலிமையாக இருக்கும்.இந்த பதிவில் காய்கறி மற்றும் பழங்களை சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகளை பார்க்கலாம்
1.பீர்க்கங்காயில் இருக்கும் வேதிப்பொருட்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகின்றன.
2.பீன்ஸ் வகைகளில் அதிக அளவு நார்ச்சத்து, புரோட்டீன், பொட்டாசியம், மக்னீசியம் நிறைந்துள்ளன. இவை, உடலுக்குத் தேவையான ஆற்றலை அளித்து, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகின்றன.
3.பீன்ஸ் செரிமானத்தை சீராக்கி, ரத்தத்தைச் சுத்திகரிக்கிறது. இதனால், ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படுகிறது.
4.காலி ஃப்ளவர் இதயம் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் ரத்தச் சர்க்கரையளவு கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
5.அடுத்து வெண்டைக்காயை கட் செய்து தண்ணீரில் ஊறவைத்திட வேண்டும். பின்னர் மறுநாள் காலை அந்த தண்ணீரை வடிக்கட்டி காலையில் குடித்து வர சர்க்கரை கட்டுக்குள் கொண்டு வர முடியும்.
6.பாகற்காயில் அதிகளவு பீட்டா கரோட்டீன் இருக்கிறது. இவை தான் நம் உடலில் விட்டமின் ஏவாக சேகரிக்கப்படுகிறது.
7.பாகற்காயில் இதில் கால்சியம், பொட்டாசியம், வைட்டமின் பி1, பி2, பி3, சி, மக்னீசியம், ஃபோலேட், சிங்க், பாஸ்பரஸ், மாங்கனீஸ், நார்ச்சத்து ஆகியவை இருக்கின்றன .
8. மேற்சொன்ன விட்டமின்கள் ரத்தத்தில் இருக்கக்கூடிய அதிகளவு சர்க்கரையை குறைத்து கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க உதவி செய்யும்